ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை! | தமிழகம் எனக்கு உறுதுணையாக உள்ளது : நன்றி சொன்ன கமல் | விஜய்சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தேவுக்கு பதிலாக நிவேதா தாமஸ்? | விக்ரம் சுகுமாரன் மறைவுக்குப் பிறகு ஓடிடியில் வெளியான மதயானை கூட்டம் | தாரே ஜமீன் பர் படத்தை யு-டியூப்பில் இலவசமாக வெளியிடும் அமீர்கான் | அறிவுரை சொல்பவர்கள் முதலில் தாங்கள் ஒழுங்கானவர்களா? : நடிகர் விநாயகன் கிண்டல் | அவசர அவசரமாக முடிக்கப்பட்ட பாலியல் வழக்குகள் ; அரசுக்கு எதிராக பார்வதி காட்டம் | ஹரி ஹர வீர மல்லு படம் தள்ளிப்போகிறதா? | ரேவதி இயக்கத்தில் பிரியாமணியின் ‛குட் ஒயிப்' | பெண் இயக்குனரின் பேண்டசி படம் 'மரகதமலை' |
தெலுங்கு இயக்குனர் அஜய் ஆண்ட்ரூஸ் இயக்கி வரும் படம் மதராஸி கேங். இதில் அத்யாயன் சுமன் கேங்ஸ்டராக நடிக்கிறார். அனன்யா ராஜ் ஹீரோயின். அஷ்மித் படேல் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.
படத்தில் நடிப்பது குறித்து அனன்யா ராஜ் கூறியதாவது: மும்பை நகரில் உள்ள மூன்று கும்பல்களைப் பற்றிய கதை. குறிப்பாக தாதர் மற்றும் சிவாஜி பூங்கா இடையேயான பகுதிகளை மையமாகக் கொண்டது. நிறைய சேரிகள் உள்ளன, இங்குதான் இந்த கும்பல்கள் உள்ளன. அப்பகுதியில் வலுவான கேங்காக உருவெடுத்த மதராஸி கேங்கின் கதை இது.
என்னுடைய கேரக்டரின் பெயர் சரிதா, சேரிகளில் வளர்ந்தவள். மகாராஷ்டிரா கேங்கை சேர்ந்தவள். கேங்க்ஸ்டர்களில் ஒருவரின் காதலியாக நடித்திருக்கிறேன். உண்மையில் மூன்று மொழிகளில் படமாகி உள்ளது. தமிழில் பேசுவது கடினமாக இருந்தது. படப்பிடிப்புகள் முடிந்து விட்டது. ஆகஸ்ட் மாதம் வெளிவருகிறது. விரைவில் ஒரு நேரடி தமிழ் படத்தில் நடிக்க இருக்கிறேன். என்கிறார் அனன்யா.