சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
வெற்றிச் செல்வன், அழகுராஜா, கபாலி உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தவர் ராதிகா ஆப்தே. தற்போது ஹிந்தியில் பிஸியான நடிகையாக வலம் வருகிறார். மற்ற நடிகைகள் போன்று கமர்ஷியல் நாயகியாக அல்லாமல் தேர்ந்தெடுத்த படங்களில், போல்டான வேடங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் அளித்த ஒரு பேட்டியில் சினிமாவில் தான் அறிமுகமான புதிதில் தான் சந்தித்த விஷயங்கள் குறித்து மனம் திறந்துள்ளார்.
அவர் கூறுகையில், ‛‛சினிமாவுக்கு நான் அறிமுகமான புதிதில் பலர் உடலில் சர்ஜரி செய்யும்படி கூறினார்கள். அதாவது மூக்கு, மார்பகம், கன்னம், கால்கள், தொடை ஆகியவற்றை சர்ஜரி செய்து இன்னும் அழகாக மாற்றும்படி கூறினர். சிலர் தலைமுடியில் வண்ணம் தீட்ட சொன்னார்கள். இவர்கள் கூறியதை கேட்டு எனக்கு கோபம் தான் வந்தது. ஆனாலும் அதன்பிறகு எனது உடலை இன்னும் அதிகமாக நேசிக்க தொடங்கினேன்'' என்றார் ராதிகா ஆப்தே.