எங்கிருந்து வந்தேனோ அங்கேயே தான் இருக்கிறேன் : இளையராஜா பேட்டி | விவாகரத்து செய்திகளுக்கு மவுனி ராய் கொடுத்த விளக்கம் | ஜூன் 19ல் திரைக்கு வரும் ‛மா இண்டி பங்காரம்' | மே 28ல் அர்ஜுனின் பிளாஸ்ட் ரிலீஸ் | கேமராவுக்கு பின்னால் எனக்கு நடிக்க தெரியவில்லை : மீனாட்சி சவுத்ரி | 'ஜனநாயகன்' போல் பைரசியில் 'கருப்பு'?: அச்சத்தில் தயாரிப்பாளர்கள் | பரிதாபம் : ஜெயிலர் 2 படப்பிடிப்பில் ஒருவர் பலி | இளையராஜா குடும்பத்துடன் 50 ஆண்டுகளாக நட்பு தொடர்கிறது: மறைந்த பஞ்சு அருணாசலம் மகன் சுப்பு பஞ்சு பேட்டி | கருப்பு : அனைத்து பகல் காட்சிகளும் ரத்து | திருவண்ணாமலையில் கிரிவலம் வந்த நடிகை அஞ்சலி |

வெற்றிச் செல்வன், அழகுராஜா, கபாலி உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தவர் ராதிகா ஆப்தே. தற்போது ஹிந்தியில் பிஸியான நடிகையாக வலம் வருகிறார். மற்ற நடிகைகள் போன்று கமர்ஷியல் நாயகியாக அல்லாமல் தேர்ந்தெடுத்த படங்களில், போல்டான வேடங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் அளித்த ஒரு பேட்டியில் சினிமாவில் தான் அறிமுகமான புதிதில் தான் சந்தித்த விஷயங்கள் குறித்து மனம் திறந்துள்ளார்.
அவர் கூறுகையில், ‛‛சினிமாவுக்கு நான் அறிமுகமான புதிதில் பலர் உடலில் சர்ஜரி செய்யும்படி கூறினார்கள். அதாவது மூக்கு, மார்பகம், கன்னம், கால்கள், தொடை ஆகியவற்றை சர்ஜரி செய்து இன்னும் அழகாக மாற்றும்படி கூறினர். சிலர் தலைமுடியில் வண்ணம் தீட்ட சொன்னார்கள். இவர்கள் கூறியதை கேட்டு எனக்கு கோபம் தான் வந்தது. ஆனாலும் அதன்பிறகு எனது உடலை இன்னும் அதிகமாக நேசிக்க தொடங்கினேன்'' என்றார் ராதிகா ஆப்தே.