என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
பின்னணி பாடகர் கேகே என்று அழைக்கப்படுகிற கிருஷ்ணகுமார் கோல்கட்டாவில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பாடிக் கொண்டிருக்கும்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவரது மரணத்துக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டது. தற்போது அவரது மருத்துவ அறிக்கை வெளியாகி உள்ளது.
அதில் கூறப்பட்டிருப்பதாவது: கிருஷ்ணகுமாருக்கு ஏற்கெனவே இதயத்திற்கு செல்லும் பிரதான கரோனரி தமனியில் 80 சதவிகித அடைப்பு இருந்திருக்கிறது. இதுவல்லாமல் சிறிய மற்றும் துணை தமணிகளிலும் அடைப்பு இருந்திருக்கிறது. ஆனால் எங்கும் 100 சதவிகித அடைப்பு காணப்படவில்லை. நிகழ்ச்சியில் அவர் அதிக உற்சாகம் அடைந்திருக்கிறார். இதன் காரணமாக இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டம் தடைபட்டிருக்கிறது. இதனால் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்திருக்கிறார். உடனடியாக அவருக்கு சிபிஆர் கொடுத்திருந்தால் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு இருந்திருக்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.