நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
கடந்த 2019ம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் நடைபெற்றது. இதில் நாசர் தலைமையில் பாண்டவர் அணியும், பாக்யராஜ் தலைமையில் சங்கரதாஸ் சுவாமிகள் அணியும் போட்டியிட்டனர். இந்தத் தேர்தலில் ஓட்டுப்பதிவு கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. அதில் விஷால் பாண்டவர் அணி வெற்றி பெற்றனர். நாசர் தலைவராகவும், விஷால் செயலாளராகவும், கார்த்தி பொருளாளராகவும் பொறுப்பேற்றுள்ளனர்.
இந்நிலையில் நடிகர் சங்க நிர்வாகிகள் நாசர், கார்த்தி, பூச்சி முருகன் ஆகியோர் நடிகர் ரஜினிகாந்த்தை அவரது இல்லத்தில் இன்று சந்தித்து பேசியுள்ளனர். நடிகர் சங்க கட்டடம் மற்றும் பல்வேறு விஷயங்களை அவருடன் பேசியுள்ளனர். அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.