ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
கடந்த 2019ம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் நடைபெற்றது. இதில் நாசர் தலைமையில் பாண்டவர் அணியும், பாக்யராஜ் தலைமையில் சங்கரதாஸ் சுவாமிகள் அணியும் போட்டியிட்டனர். இந்தத் தேர்தலில் ஓட்டுப்பதிவு கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. அதில் விஷால் பாண்டவர் அணி வெற்றி பெற்றனர். நாசர் தலைவராகவும், விஷால் செயலாளராகவும், கார்த்தி பொருளாளராகவும் பொறுப்பேற்றுள்ளனர்.
இந்நிலையில் நடிகர் சங்க நிர்வாகிகள் நாசர், கார்த்தி, பூச்சி முருகன் ஆகியோர் நடிகர் ரஜினிகாந்த்தை அவரது இல்லத்தில் இன்று சந்தித்து பேசியுள்ளனர். நடிகர் சங்க கட்டடம் மற்றும் பல்வேறு விஷயங்களை அவருடன் பேசியுள்ளனர். அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.