விஜய் பாணியை பின்பற்றினால் நல்லது: 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜூ | விரைவில் 'லக்கி பாஸ்கர் 2': வெங்கி அட்லூரி அப்டேட் | கூலி திரைப்படம் ஐமேக்ஸில் வெளியாவதில் புதிய சிக்கல்? | காமெடி நடிகரின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு 50 லட்சம் தர பிரபாஸ் வாக்குறுதி | படம் என்ன ஜானர் என்று ரிலீஸுக்கு முன்பே சொல்லிவிடுங்கள் ; சசிகுமார் வேண்டுகோள் | 'தொடரும்' கெட்டப்பில் புரோமோ வீடியோவுடன் பிக்பாஸ் சீசன் 7 அறிவிப்பை வெளியிட்ட மோகன்லால் | இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் மொத்தமாக நீக்கிய ரன்வீர் சிங் ; ரசிகர்கள் கவலை | சூர்யா பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் தெலுங்கு 'அயன்' | அசோக் செல்வன் புதிய பட அப்டேட்! | 'பையா' பட தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகிறது! |
சாமி 2 படத்திற்கு பிறகு ஹரி இயக்கி இருக்கும் படம் யானை. இதில் அருண் விஜய், பிரியா பவானி சங்கர், சமுத்திரகனி, அம்மு அபிராமி, ராதிகா சரத்குமார் உள்பட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ளார், கோபிநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படத்தின் அறிமுக நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் இயக்குனர் ஹரி பேசியதாவது: எனது 'தமிழ்' படத்தில் ஆரம்பித்த பயணம், மெல்ல மெல்ல ஆக்ஷன் படங்களுக்கு தாவி... அதில் வெற்றி கிடைத்ததால் அதிலேய பயணித்து தெலுங்கு படங்கள் மாதிரியான படங்கள் வரை சென்று விட்டேன். எனக்கு சில ஆண்டுகள் இடைவெளி கிடைத்தது. அதில் நான் நிறைய சிந்தித்தேன். நிறைய படங்கள் பார்த்தேன். இப்போதுள்ள டிரண்டை புரிந்து கொண்டேன். அதனால் என்னை முழுமையாக மாற்றிக் கொண்டு உருவாக்கி உள்ள படம் யானை.
இதில் எனது பாணியிலான படு வேகம் இருக்காது, ஓங்கி அடிச்சா ஒண்டரை டன் வெயிட் இருக்காது. ஒரு எமோல்சலான, பீல் குட் படமாக இருக்கும். இரண்டு இடத்திலாவது ஆடியன்ஸ் கண்ணீர் சிந்தினால் இந்த படம் வெற்றி. அப்படி யோசித்து இந்த படத்தை எடுத்துள்ளேன். யானை எப்போதும் தன் குடும்பத்துடன் இருக்கும், மிகுந்த பொறுமையான விலங்கு. ஆனால் அதற்கு கோபம் வந்தால் என்ன ஆகும் அதுதான் இந்த படத்தின் கதை. என்றார்.