ஏவிஎம் சரவணன் மறைவு : அஜித், விஜய், விக்ரம் அஞ்சலி செலுத்தவில்லை | மரணத்தை வைத்து மீம்ஸ் போடுவதா? ஜான்வி கபூர் கடும் ஆதங்கம்! | ஏவிஎம் சரவணன் உடல் தகனம் | உங்கள் பெயர் சொல்லும் பிள்ளைகளில் நானும் ஒருவன் : சரவணனுக்கு கமல் புகழ் அஞ்சலி | இந்த வார ஓடிடி ரிலீஸ்: சிறிய படங்கள் தான்....ஆனா ஒவ்வொன்னும் செம'வொர்த்'..! | 'பாகுபலி தி எபிக்' புரமோஷனுக்காக ஜப்பான் சென்ற பிரபாஸ்! | மம்முட்டியின் களம்காவல் படத்தில் 22 கதாநாயகிகள் | ஏர் இந்தியா விமான சேவை மீது சிதார் இசைக் கலைஞர் ரவிசங்கரின் மகள் குற்றச்சாட்டு | துல்கர் சல்மானுக்கு தான் விருது கிடைத்திருக்க வேண்டும் : நடிகர் விநாயகன் ஆதங்கம் | தொடரும் பட ஹிந்தி ரீமேக்கில் அஜய் தேவகன் : இயக்குனர் தருண் மூர்த்தியின் சாய்ஸ் |

சாமி 2 படத்திற்கு பிறகு ஹரி இயக்கி இருக்கும் படம் யானை. இதில் அருண் விஜய், பிரியா பவானி சங்கர், சமுத்திரகனி, அம்மு அபிராமி, ராதிகா சரத்குமார் உள்பட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ளார், கோபிநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படத்தின் அறிமுக நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் இயக்குனர் ஹரி பேசியதாவது: எனது 'தமிழ்' படத்தில் ஆரம்பித்த பயணம், மெல்ல மெல்ல ஆக்ஷன் படங்களுக்கு தாவி... அதில் வெற்றி கிடைத்ததால் அதிலேய பயணித்து தெலுங்கு படங்கள் மாதிரியான படங்கள் வரை சென்று விட்டேன். எனக்கு சில ஆண்டுகள் இடைவெளி கிடைத்தது. அதில் நான் நிறைய சிந்தித்தேன். நிறைய படங்கள் பார்த்தேன். இப்போதுள்ள டிரண்டை புரிந்து கொண்டேன். அதனால் என்னை முழுமையாக மாற்றிக் கொண்டு உருவாக்கி உள்ள படம் யானை.
இதில் எனது பாணியிலான படு வேகம் இருக்காது, ஓங்கி அடிச்சா ஒண்டரை டன் வெயிட் இருக்காது. ஒரு எமோல்சலான, பீல் குட் படமாக இருக்கும். இரண்டு இடத்திலாவது ஆடியன்ஸ் கண்ணீர் சிந்தினால் இந்த படம் வெற்றி. அப்படி யோசித்து இந்த படத்தை எடுத்துள்ளேன். யானை எப்போதும் தன் குடும்பத்துடன் இருக்கும், மிகுந்த பொறுமையான விலங்கு. ஆனால் அதற்கு கோபம் வந்தால் என்ன ஆகும் அதுதான் இந்த படத்தின் கதை. என்றார்.