நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
75வது கேன்ஸ் பட விழா கடந்த மே 17ம் தேதி தொடங்கி நடைபெற்றது. இதில் உலகமெங்கிலும் இருந்து ஏராளமான திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த படங்களும் இதில் திரையிடப்பட்டன. பார்த்திபன் இயக்கிய சிங்கிள் ஷாட் படமான இரவின் நிழல், மாதவனின் ராக்கெட்ரி உள்ளிட்ட படங்கள் திரையிடப்பட்டன.
நிறைவு விழாவில் சிறந்த படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. அனைத்து விருதுகளையும் மேற்கத்திய நாட்டு படங்களே வழக்கம்போல அள்ளிச் சென்றது. முதன் முறையாக ஒரு பாகிஸ்தானி படம் விருது வென்றது. இந்தியாவை பொருத்தவரை ஷானக் சென் இயக்கிய ஆல் தட் ப்ரீத்தஸ் என்ற ஆவணப்படம் விருது பெற்றது. அதற்கு கோல்டன் ஐ விருது வழங்கப்பட்டது.
தலைநகர் டில்லி மாசடைந்து வருவது குறித்தும், அந்த மாசுக்கு இடையில் மாட்டிக்கொண்ட ஒரு பருந்தையும், அந்த பருந்தை காப்பாற்ற போராடும் இரு சிறுவர்களையும் பற்றியும் இந்த படம் உருவாகி உள்ளது. இந்திய அளவில் ஏற்கெனவே பாராட்டையும், விருதுகளையும் பெற்ற படம், தற்போது கேன்ஸ் விருதையும் வென்றிருக்கிறது.