விக்னேஷ் சிவனை பிரிவதாக வதந்தி : போட்டோவால் பதில் சொன்ன நயன்தாரா | தமிழில் மீண்டும் நடிக்கும் அன்னா பென் | சூர்யா சேதுபதியின் வாழ்க்கையில் விளையாடாதீர்கள் : அனல் அரசு வேண்டுகோள் | பிளாஷ்பேக் : நயன்தாராவை கவர்ச்சி களத்தில் தள்ளிய 'கள்வனின் காதலி' | 'பெத்தி' படத்தில் சிவராஜ் குமார் முதல் பார்வை வெளியீடு | ‛பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீ மேக்கான ‛தடக் 2' டிரைலர் வெளியீடு, ஆக., 1ல் ரிலீஸ் | சிவகார்த்திகேயன் 24வது படம் தள்ளிப்போகிறதா? | தனுஷ் 54வது படத்தில் இணைந்தது குறித்து பிரித்வி பாண்டியராஜன் நெகிழ்ச்சி! | சிவராஜ் குமாரின் 131வது படம் அறிவிப்பு | 'லியோ'வில் என்னை வீணாக்கினார் லோகேஷ் : சஞ்சய் தத் கமெண்ட் |
சமீபத்தில் 52ஆவது கேரள அரசு விருதுகள் அறிவிக்கப்பட்டன. இந்தப்பட்டியலில் மோகன்லால், மம்முட்டி, பிரித்திவிராஜ் என முன்னணி நடிகர்களின் படங்கள் எந்த விருதுகளையும் கைப்பற்றவில்லை என்பது ஒரு பக்கம் இருக்க, அதிக விருதுகளை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்பட்ட சில படங்களுக்கும் எந்த விருதும் கிடைக்கவில்லை என்பது ரசிகர்களையும் விமர்சகர்களையும் அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்திற்கும் உள்ளாக்கி இருக்கிறது.
அதில் குறிப்பாக கடந்த வருடம் வெளியான ஹோம் என்கிற திரைப்படம் விமர்சன ரீதியாக மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. கேரள அரசு விருதுக்காக இந்த படம் அனுப்பப்பட்டபோது நிச்சயம் பல விருதுகளை இந்தப்படம் கைப்பற்றும் என்று பலரும் கூறி வந்தனர். ஆனால் இந்த படத்திற்கு ஒரு பிரிவில் கூட விருது அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் இந்த வருடத்திய விருது பட்டியல் குறித்து முதல் சர்ச்சையாக இது கிளம்பியுள்ளது. இந்த படத்தில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் இந்திரன்ஸ் தனது வருத்தத்தை தற்போது வெளிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, ஒருவேளை இந்த படத்தை தேர்வுக்குழு தலைவர் பார்க்காமல் விட்டு விட்டாரோ என்னவோ..? இந்த படம் சில விருதுகளை பெரும் என எதிர்பார்த்தேன்.. ஆனால் அது நடைபெறவில்லை.. ஒருவேளை இந்த படத்தின் தயாரிப்பாளர் விஜய்பாபு என்பதால் தான் இப்படி நிகழ்ந்து விட்டதோ” என்று கூறியுள்ளார் இந்திரன்ஸ்
இவர் குறிப்பிடும் தயாரிப்பாளர் விஜய்பாபு தான், கடந்த சில நாட்களாக நடிகை ஒருவர் அளித்த பாலியல் குற்றச்சாட்டு புகார் காரணமாக போலீசாரிடம் சிக்காமல் வெளிநாட்டில் தலைமறைவாக இருந்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து நடிகர் இந்திரன்ஸ் மேலும் கூறும்போது, “ஒரு குடும்பத்தில் உள்ள ஒருவர் தவறு செய்தார் என்பதற்காக மொத்த குடும்ப உறுப்பினர்களையும் தண்டிப்பது எந்த வகையில் நியாயம்..? இப்போது விஜய்பாபு குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.. ஒருவேளை நாளை அவர் நிரபராதி என நிரூபிக்கப்பட்டால் இந்த படத்திற்கு எந்த விதமாக நியாயம் செய்யப்படும்” என்கிற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார்.