'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? | ‛ஆன்டி' கதாபாத்திரம்: கொதித்த சிம்ரன் | பிடிகொடுக்காத நடிகரால் அதிருப்தியில் பிரமாண்ட இயக்குனர் |
சினிமாவில் ஹீரோ, வில்லன், கேரக்டர் என பலதரப்பட்ட வேடங்களில் நடித்து வரும் மன்சூரலிகான் அவ்வப்போது இயக்குனர், தயாரிப்பாளர் என்றும் அவதரிப்பார். மேலும், எப்போது தேர்தல் வந்தாலும் அப்போது ஏதாவது ஒரு கட்சி சார்பில் வேட்பாளராக போட்டியிடுபவர், பல தேர்தல்களில் சுயேட்சையாகவும் போட்டியிட்டு தோல்வி அடைந்திருக்கிறார். இந்தநிலையில், தன்னிடம் நிலம் வாங்கித்தருவதாக சொல்லி வாசைக்கனி என்ற நபர் ரூ. 50 லட்சம் வாங்கி அதை ஏமாற்றி விட்டதாக போலீசில் புகார் அளித்துள்ள மன்சூரலிகான், அந்த பணத்தை மீட்டுத்தருமாறு கேட்டுக் கொண்டுள்ளார். இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.