அனுஷ்காவின் ‛காட்டி' படம் மீண்டும் தள்ளிப் போகிறதா? | சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்னையா...? : இவானா அளித்த பதில் | திருவண்ணாமலையில் கண்ணீருடன் தரிசனம் செய்த அம்பிகா | சூர்யா சேதுபதி : தமிழ் சினிமாவில் அடுத்த வாரிசு நடிகர், வரவேற்பு பெறுவாரா ? | அல்லு அர்ஜுன் - பிரசாந்த் நீல் கூட்டணியில் 'ராவணம்' | ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? |
சினிமாவில் ஹீரோ, வில்லன், கேரக்டர் என பலதரப்பட்ட வேடங்களில் நடித்து வரும் மன்சூரலிகான் அவ்வப்போது இயக்குனர், தயாரிப்பாளர் என்றும் அவதரிப்பார். மேலும், எப்போது தேர்தல் வந்தாலும் அப்போது ஏதாவது ஒரு கட்சி சார்பில் வேட்பாளராக போட்டியிடுபவர், பல தேர்தல்களில் சுயேட்சையாகவும் போட்டியிட்டு தோல்வி அடைந்திருக்கிறார். இந்தநிலையில், தன்னிடம் நிலம் வாங்கித்தருவதாக சொல்லி வாசைக்கனி என்ற நபர் ரூ. 50 லட்சம் வாங்கி அதை ஏமாற்றி விட்டதாக போலீசில் புகார் அளித்துள்ள மன்சூரலிகான், அந்த பணத்தை மீட்டுத்தருமாறு கேட்டுக் கொண்டுள்ளார். இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.