‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
தமிழில் உள்ள பிரபல இயக்குனர்களும் பிரபல ஹீரோக்களும் தெலுங்கிலும் தங்களது முத்திரையை பதிக்க களம் இறங்கி விட்டனர். ஒரு பக்கம் விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்கள் நேரடி தெலுங்கு படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட, இந்தப் பக்கம் இயக்குனர் ஷங்கர் முதல்முறையாக நேரடி தெலுங்கு படம் ஒன்றை இயக்கி வருகிறார். கதாநாயகனாக ராம்சரண் நடிக்கும் இந்த படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.
இந்த படத்தில் ராம்சரண் ஒரு ஐஏஎஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இந்த படத்தில் இதுவரை வெளியான ராம்சரணின் லுக்கும் அதை உறுதிப்படுத்துவது போல அமைந்துள்ளது. இந்த நிலையில் இந்த படத்திற்கு அதிகாரி என டைட்டில் வைக்கப்பட இருப்பதாக ஒரு தகவல் சோசியல் மீடியாவில் கசிந்துள்ளது. தமிழில் 25 வருடங்களுக்கு முன்பு நடிகர் அருண்பாண்டியன் நடிப்பில் அதிகாரி என்கிற படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.