'பைசன்' படத்தை பாராட்டிய பா.ஜ.,வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை! | ஹாட்ரிக் ரூ.100 கோடி வசூலை தந்த பிரதீப் ரங்கநாதன் | அக்டோபர் 31ல் நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் தனுஷின் இட்லி கடை! | 5 நிமிட நடனத்திற்கு ஐந்து கோடி சம்பளம் வாங்கும் பூஜா ஹெக்டே! | கருத்த மச்சான் பாடலுக்கு மமிதா பைஜூ அசத்தல் நடனம் ! வைரலாகும் வீடியோ!! | கிண்டல் செய்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த சூரி | 'பராசக்தி' பாடல்கள் விரைவில்… ஜிவி பிரகாஷ் தகவல் | கதை நாயகியான கீதா கைலாசம் | திரவுபதி 2: ரிச்சர்ட்சின் 'வீர சிம்ஹா கடவராயன்' தோற்றம் வெளியீடு | இளம் வயது தோற்றத்தில் கிஷோர் |
இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் வாழ்க்கை சினிமா மினிமம் கியாரண்டி படங்களாக உருவெடுத்திருக்கிறது. டோனி, சச்சின் டெண்டுல்கர், கபில்தேவ் உள்ளிட்டவர்களின் வாழ்க்கை சினிமா ஆகியிருக்கிறது. இந்த வரிசையில் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் வாழ்க்கையும் சினிமா ஆகிறது.
இவரது படத்தை இயக்கப்போவது ரஜினியின் மகளும், தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா என்ற தகவல் பரவி உள்ளது. தற்போது ஐஸ்வர்யா பிசிசிஐ தலைவராக இருந்து சவுரவ் கங்குலி நடத்தும் ஐபிஎல் போட்டியை காண தனது மகன்களுடன் கோல்கட்டா சென்றுள்ளார். அங்கு கங்குலி நடத்திய விருந்திலும் கலந்து கொண்டுள்ளார். இதை வைத்துக் கொண்டு இந்த தகவல்கள் பரவி இருக்கிறது. ஆனால் இதனை ஐஸ்வர்யா இதுவரை மறுக்கவில்லை.
தனுஷ் நடித்த 3, கவுதம் கார்த்திக் நடித்த வை ராஜா வை படங்களின் மூலம் தன்னை திறமையான இயக்குனர் என்று நிரூபித்தவர் ஐஸ்வர்யா. தற்போது அவர் ஓ சாதிசால் என்ற பாலிவுட் படத்தை இயக்கி வருகிறார்.