கூலி படத்தில் ரஜினி உடன் நடித்தது ஸ்பெஷலான அனுபவம் : பூஜா ஹெக்டே | அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? : ரவி மோகன் கொடுத்த பதில் | விஜய் சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தே? | பாங்காக் பறந்த இட்லி கடை படக்குழு | 24 லட்சம் வாடகையில் புதிய அபார்ட்மென்ட்டுக்கு குடிபெயர்ந்த ஷாருக்கான் | உடை மாற்ற உதவிக்கு வருவேன் என அடம்பிடித்த போதை நடிகர் : மலையாள நடிகை அதிர்ச்சி தகவல் | ஜெய ஜெய ஜெய ஜெய ஹே ஹிந்தி ரீமேக்கை அமீர்கான் கைவிட்டது ஏன்? : நடிகர் புது தகவல் | மீரா ஜாஸ்மின் பெயர் என் காதுகளில் ஒலிக்காத நாளே இல்லை ; சிலாகித்த நயன்தாரா | கேரள முதல்வரின் சொந்த ஊர் கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் | கிடப்பில் இருக்கும் பிரபுதேவா படத்தை வெளியிட முயற்சி |
இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் வாழ்க்கை சினிமா மினிமம் கியாரண்டி படங்களாக உருவெடுத்திருக்கிறது. டோனி, சச்சின் டெண்டுல்கர், கபில்தேவ் உள்ளிட்டவர்களின் வாழ்க்கை சினிமா ஆகியிருக்கிறது. இந்த வரிசையில் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் வாழ்க்கையும் சினிமா ஆகிறது.
இவரது படத்தை இயக்கப்போவது ரஜினியின் மகளும், தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா என்ற தகவல் பரவி உள்ளது. தற்போது ஐஸ்வர்யா பிசிசிஐ தலைவராக இருந்து சவுரவ் கங்குலி நடத்தும் ஐபிஎல் போட்டியை காண தனது மகன்களுடன் கோல்கட்டா சென்றுள்ளார். அங்கு கங்குலி நடத்திய விருந்திலும் கலந்து கொண்டுள்ளார். இதை வைத்துக் கொண்டு இந்த தகவல்கள் பரவி இருக்கிறது. ஆனால் இதனை ஐஸ்வர்யா இதுவரை மறுக்கவில்லை.
தனுஷ் நடித்த 3, கவுதம் கார்த்திக் நடித்த வை ராஜா வை படங்களின் மூலம் தன்னை திறமையான இயக்குனர் என்று நிரூபித்தவர் ஐஸ்வர்யா. தற்போது அவர் ஓ சாதிசால் என்ற பாலிவுட் படத்தை இயக்கி வருகிறார்.