பிளாஷ்பேக்: விக்ரம் முதல் காட்சி வசூலை குழந்தைகளுக்கு கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த பாடல் சர்ச்சை | ஹீரோவான யு டியூபர் | 4 வருடங்களுக்கு பிறகு வெளியானது 'பேமிலி மேன் 3' | 8 மணி நேர வேலை: ஓங்கி ஒலிக்கும் நடிகைகளின் குரல் | சர்வதேச திரைப்பட விழாவில் 'அமரன்' டீம் | டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் |

இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் வாழ்க்கை சினிமா மினிமம் கியாரண்டி படங்களாக உருவெடுத்திருக்கிறது. டோனி, சச்சின் டெண்டுல்கர், கபில்தேவ் உள்ளிட்டவர்களின் வாழ்க்கை சினிமா ஆகியிருக்கிறது. இந்த வரிசையில் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் வாழ்க்கையும் சினிமா ஆகிறது.
இவரது படத்தை இயக்கப்போவது ரஜினியின் மகளும், தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா என்ற தகவல் பரவி உள்ளது. தற்போது ஐஸ்வர்யா பிசிசிஐ தலைவராக இருந்து சவுரவ் கங்குலி நடத்தும் ஐபிஎல் போட்டியை காண தனது மகன்களுடன் கோல்கட்டா சென்றுள்ளார். அங்கு கங்குலி நடத்திய விருந்திலும் கலந்து கொண்டுள்ளார். இதை வைத்துக் கொண்டு இந்த தகவல்கள் பரவி இருக்கிறது. ஆனால் இதனை ஐஸ்வர்யா இதுவரை மறுக்கவில்லை.
தனுஷ் நடித்த 3, கவுதம் கார்த்திக் நடித்த வை ராஜா வை படங்களின் மூலம் தன்னை திறமையான இயக்குனர் என்று நிரூபித்தவர் ஐஸ்வர்யா. தற்போது அவர் ஓ சாதிசால் என்ற பாலிவுட் படத்தை இயக்கி வருகிறார்.




