விக்ரம் 63வது படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர் | என்னுடைய டேஸ்ட்டே வேற! சொல்கிறார் ஸ்ரீ லீலா | கவுரி கிஷனின் பேராசை | திரையரங்குகளில் வசூலை வாரி குவிந்த படங்கள்....இந்த வார ஓடிடி ரிலீஸ்.......! | மாத செலவுக்கு ரூ.6.5 லட்சம் மாதம்பட்டி ரங்கராஜ் தர வேண்டும்; ஜாய் கிரிசில்டா மனு | ராஷ்மிகாவுக்கு ஜோடியாக கன்னட நடிகர் ஏன் ? ; 'தி கேர்ள் பிரண்ட்' இயக்குனர் விளக்கம் | மகேஷ் பாபு குடும்பத்திலிருந்து ஒரு கதாநாயகி | தொடர்ந்து தெலுங்கு இயக்குநர்களிடம் கதை கேட்கும் சூர்யா | லோகேஷ் கனகராஜ் ஜோடியான வாமிகா கபி | மீண்டும் ரஜினியுடன் இணையும் சந்தானம் |

ஈஸ்வரன் படத்தையடுத்து வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த மாநாடு படம் வெற்றி பெற்றதையடுத்து தற்போது வெந்து தணிந்தது காடு, பத்து  தல, கொரோனா  குமார் உள்பட பல படங்களில் நடித்து வருகிறார் சிம்பு.  இந்நிலையில் பல சீரியல்களில் நடித்து வரும் ஸ்ரீநிதி விஜய் என்ற நடிகை சில மாதங்கள் முன்பு சோசியல் மீடியாவில், எல்லோருக்கும் திருமணம் ஆகியிருக்கும். ஆனால் நானும் சிம்புவும் மட்டும் சிங்கிள் ஆகவே இருப்போம் என்று பதிவிட்டிருந்தார். அதற்கு ரசிகர்கள் பல கமெண்டுகளை கொடுத்து வந்தார்கள். 
இந்த நிலையில் சிம்புவின் வீட்டின் முன்பு தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு நடிகை ஸ்ரீநிதி விஜய் தர்ணா செய்திருக்கிறார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தனது சமூக வலைதளத்தில்  பதிவிட்டு உள்ள ஸ்ரீ நிதி விஜய்,  இத்தனை ஆண்டுகள் எனக்காக தான் நீங்கள் சிங்கிளாக இருந்தீர்கள் என்பதை நம்பவே முடியவில்லை. இன்னைக்கு தான் எனக்கு புரிந்தது. எல்லோரும் சிம்புவையும் என்னையும் சேர்த்து வையுங்கள் ப்ளீஸ் என்று ஸ்ரீநிதி விஜய் பதிவிட்டுள்ளார்.  உண்மையிலேயே சிம்புவை இவர் காதலிக்கிறாரா? இல்லை ஒரு பப்ளிசிட்டிக்காக இப்படி செய்து கொண்டிருக்கிறாரா? என்பது தெரியவில்லை.
 
           
             
           
             
           
             
           
            