என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நிக்கி கல்ராணி. இவருக்கும் நடிகர் ஆதிக்கும் நேற்று அதிகாலையில் சென்னையில் தெலுங்கு முறைப்படி திருமணம் நடைபெற்றது. நிக்கி கல்ராணியின் அக்கா சஞ்சனா கல்ராணி நேற்று தனது தங்கையின் திருமணத்தன்று ஆண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.
சஞ்சனா இரண்டு வருடங்களுக்கு முன்பு ஆசிஷ் பாஷா என்பவரைக் காதல் திருமணம் செய்து கொண்டார். 2020ம் வருடம் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு மூன்று மாதங்கள் சிறையில் இருந்து பின்னர் பெயில் பெற்று வெளியில் வந்தார். சஞ்சனா தமிழில் சில படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
தனக்கு வாழ்த்து தெரிவித்தவர்களின் பதிவுகளை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார் சஞ்சனா. தனது அக்காவிற்கு குழந்தை பிறந்தது குறித்து எந்த ஒரு வாழ்த்தையும் பதிவிடவில்லை நிக்கி. தனது திருமணப் புகைப்படங்களை மட்டுமே பதிவிட்டுள்ளார்.