திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் ஆளுங்கட்சி தலையீடு: தயாரிப்பாளர்கள் குமுறல் | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் |

இந்தியாவில் நடைபெறும் மிகப்பெரிய சர்வதேச திரைப்பட விழா இந்தியன் பனோரமா என்று அழைக்கப்படும் கோவா சர்வதேச திரைப்பட விழா. உலக அளவில் டாப் 10 திரைப்பட விழாக்களில் இதுவும் ஒன்று. இந்த ஆண்டுக்கான 53வது சர்வதேச திரைப்பட விழா வருகிற நவம்பர் 20ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடக்கும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நடைபெற்று வரும் கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், 53வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் அறிவிப்பு போஸ்டரை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் நடிகை தீபிகா படுகோன், தமன்னா, நடிகர்கள் ஆர் மாதவன், நவாசுதீன் சித்திக், இசை அமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் கலந்து கொண்டனர்.