தமிழுக்கு வரும் சப்தமி கவுடா | டிக்கெட் முன்பதிவில் 1.5 கோடி வசூலித்த மங்காத்தா | பவன் கல்யாண் ஒரு நாள் இந்தியாவின் பிரதமராவார் : சொல்கிறார் நடிகை நித்தி அகர்வால் | அருள்நிதி கையில் 3 படங்கள் : இந்த ஆண்டு அடுத்தடுத்து ரிலீஸ் | லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படப்பிடிப்பு நிறைவு | ஜனநாயகன் சென்சார் விவகாரம் : இனியாவது வாயை திறப்பாரா விஜய்? | சூரி சொன்ன 'மண்டாடி' கதை | தந்தைக்கு எதிராக வெறுப்பு பேச்சு : கதீஜா ரஹ்மான் கோபம் | ஒரே நேரத்தில் தயாராகும் 34 படங்கள் | பிளாஷ்பேக் : 5 நாளில் படமாக்கப்பட்ட 'பாசம் ஒரு வேசம்' |

பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிப்பில் வெளியான கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களும் சூப்பர் ஹிட்டாகியுள்ளன . இப்படத்தின் இரண்டாம் பாகம் 1,100 கோடிக்கு மேல் வசூலித்ததாக கூறப்படுகிது. மேலும் இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும்போது மூன்றாம் பக்கத்திற்கான அறிவிப்பும் வெளியாகிவிட்டது. இந்த நிலையில் தற்போது பிரபாஸ் நடிப்பில் சலார் படத்தை இயக்கி வரும் பிரசாந்த் நீல் அந்த படத்தை முடித்ததும் கேஜிஎப்-3 படத்தின் பணிகளை தொடங்க உள்ளார். இருப்பினும் இதில் நடிக்க ஹாலிவுட் நடிகர்கள் சிலரிடத்தில் பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதோடு ராஜமவுலியின் பாகுபலி படத்தில் வில்லனாக நடித்த ராணா இப்படத்தில் வில்லனாக நடிக்க கமிட்டாகி இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.




