தான் படித்த கல்லூரியின் பாடத்திட்டத்தில் இடம்பெற்ற மம்முட்டியின் வாழ்க்கை வரலாறு | மத்திய அமைச்சருக்கே இந்த நிலை என்றால் ? சுரேஷ்கோபி பட சென்சார் சர்ச்சை குறித்து மாநில அமைச்சர் காட்டம் | மீண்டும் துடிப்புடன் படப்பிடிப்புக்கு தயாரான மம்முட்டி | ஜுலை 4ல் 6 படங்கள் ரிலீஸ் | 2025ன் 6 மாதங்களில் 122 படங்கள் ரிலீஸ் | விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை கொலை செய்யும் யூடியூபர்கள்: சுசீந்திரன் காட்டம் | இரண்டேகால் படம் : விமல் சொன்ன புதுக்கணக்கு | அனிமல் படம் குறித்த விமர்சனத்திற்கு ராஷ்மிகா கொடுத்த பதிலடி | கே.பி.ஒய் பாலாவின் ‛காந்தி கண்ணாடி' டைட்டில் முன்னோட்ட வீடியோ வெளியீடு | அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை : நடிகர் சங்கம் எச்சரிக்கை |
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருப்பவர் சமந்தா. நடிகர் நாகசைதன்யாவைக் காதலித்து திருமணம் செய்து கொண்டு சில வருடங்களிலேயே பிரிந்தார். பொதுவாக ஒரு நடிகைக்குத் திருமணம் ஆகிவிட்டால் அதையே காரணமாக வைத்து அவரை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்ய மாட்டார்கள். ஆனால், அந்தத் தடைகளை மீறி திருமணத்திற்குப் பின்னும் கதாநாயகியாக நடித்து வந்தார் சமந்தா. திருமணப் பிரிவுக்குப் பிறகும் அவரது இமேஜ் போய்விடும், வாய்ப்புகள் கிடைக்காது என்றார்கள். இருந்தாலும் இப்போதுதான் இன்னும் அதிகமான வாய்ப்புகளைப் பெற்று வருகிறார் சமந்தா.
தற்போது 'சாகுந்தலம், யசோதா' என அடுத்தடுத்து இரண்டு பான் இந்தியா படங்கள் சமந்தா நடித்து வரவிருக்கின்றன. விஜய் தேவரகொன்டா ஜோடியாக தற்போது நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழில் வெளியான 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படமும் வெற்றி பெற்றுள்ளது.
கடந்த இரு தினங்களாக ஒரு பத்திரிகைக்காக எடுக்கப்பட்ட கவர்ச்சிப் புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து ஆச்சரியப்படுத்தி வருகிறார் சமந்தா. அந்தப் பத்திரிகையின் பேட்டியிலும் கவர்ச்சியாகவும், ஆக்ஷன் கதாபாத்திரங்களிலும் நடிக்கத் தயார் என சொல்லியிருக்கிறார்.
“எனது நிறத்துக்காக எனக்கு நம்பிக்கை வருவதற்கு சில காலங்கள் ஆனது. ஆனால், இப்போது கவர்ச்சியான கதாபாத்திரம் என்றாலும், ஆக்ஷன் கதாபாத்திரம் என்றாலும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க நிறைய நம்பிக்கை வந்துள்ளது. எனது கடந்த காலங்களில் அப்படி நடிக்க எனக்கு நம்பிக்கை இல்லாமல் இருந்தது. நிறைய படங்களில் நடித்த பிறகு எனக்கு நம்பிக்கை அதிகமானது என்று சொல்லலாம். வயதும் அனுபவமும் அதற்கு ஒரு காரணம்,” எனத் தெரிவித்துள்ளார்.