பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
நயன்தாரா தயாரித்து நடித்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் இருவிதமான விமர்சனங்களை பெற்றபோதும் வசூல் ரீதியாக எல்லோருக்கும் திருப்பதியை கொடுத்துள்ளது. இதற்கு நன்றி சொல்லவும், விரைவில் நடக்க இருக்கும் திருமணத்திற்கு ஆசி பெறவும் நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் ஷீரடி சென்று சாய்பாபாவை தரிசனம் செய்தார்.
இருவரும் சாய்பாபா கோவிலுக்கு சென்று பாபா தரிசனம் முடிந்த பிறகு அங்குள்ள மண்டபத்தில் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தனர். ரசிகர்கள் தொல்லை இல்லாததால் அவர்கள் பலமுறை கோவிலை சுற்றி வந்துள்ளனர்.
அடிப்படையில் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவராக நயன்தாரா, பிரபு தேவாவை காதலித்தபோது இந்து மதத்திற்கு மாறினார். அதன் பிறகு இந்து மதத்தின் தீவிர பக்தையாக மாறி இருக்கிறார். திருப்பதிக்கு அடிக்கடி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்து பெண்ணாக வாழ்வதில் அவர் முழு திருப்தியும், அமைதியும் அடைந்திருப்பதையே இது காட்டுகிறது. என்கிறார்கள்.