விஜய் பாணியை பின்பற்றினால் நல்லது: 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜூ | விரைவில் 'லக்கி பாஸ்கர் 2': வெங்கி அட்லூரி அப்டேட் | கூலி திரைப்படம் ஐமேக்ஸில் வெளியாவதில் புதிய சிக்கல்? | காமெடி நடிகரின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு 50 லட்சம் தர பிரபாஸ் வாக்குறுதி | படம் என்ன ஜானர் என்று ரிலீஸுக்கு முன்பே சொல்லிவிடுங்கள் ; சசிகுமார் வேண்டுகோள் | 'தொடரும்' கெட்டப்பில் புரோமோ வீடியோவுடன் பிக்பாஸ் சீசன் 7 அறிவிப்பை வெளியிட்ட மோகன்லால் | இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் மொத்தமாக நீக்கிய ரன்வீர் சிங் ; ரசிகர்கள் கவலை | சூர்யா பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் தெலுங்கு 'அயன்' | அசோக் செல்வன் புதிய பட அப்டேட்! | 'பையா' பட தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகிறது! |
நயன்தாரா தயாரித்து நடித்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் இருவிதமான விமர்சனங்களை பெற்றபோதும் வசூல் ரீதியாக எல்லோருக்கும் திருப்பதியை கொடுத்துள்ளது. இதற்கு நன்றி சொல்லவும், விரைவில் நடக்க இருக்கும் திருமணத்திற்கு ஆசி பெறவும் நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் ஷீரடி சென்று சாய்பாபாவை தரிசனம் செய்தார்.
இருவரும் சாய்பாபா கோவிலுக்கு சென்று பாபா தரிசனம் முடிந்த பிறகு அங்குள்ள மண்டபத்தில் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தனர். ரசிகர்கள் தொல்லை இல்லாததால் அவர்கள் பலமுறை கோவிலை சுற்றி வந்துள்ளனர்.
அடிப்படையில் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவராக நயன்தாரா, பிரபு தேவாவை காதலித்தபோது இந்து மதத்திற்கு மாறினார். அதன் பிறகு இந்து மதத்தின் தீவிர பக்தையாக மாறி இருக்கிறார். திருப்பதிக்கு அடிக்கடி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்து பெண்ணாக வாழ்வதில் அவர் முழு திருப்தியும், அமைதியும் அடைந்திருப்பதையே இது காட்டுகிறது. என்கிறார்கள்.