ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

பார்த்திபன் இயக்கி, நடித்துள்ள படம் 'இரவின் நிழல்'. உலகின் புது முயற்சியாக இந்த படம் ஒரே ஷாட்டில் லான் லீனியர் படமாக எடுக்கப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன் இப்பட விழாவில் நடிகர் ரோபோ சங்கர் மீது பார்த்திபன் மைக்கை வீசி எறிந்த சம்பம் சர்ச்சையானது. இதற்கு பார்த்திபன் வருத்தம் தெரிவித்தார். ரோபோ சங்கரும் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. தன் தரப்பு விளக்கத்தையும் கொடுத்தார். இந்நிலையில் இந்த விவகாரத்தை முத்தம் கொடுத்து முற்றுப்புள்ளி வைத்துள்ளார் பார்த்திபன்.
இதுபற்றி பார்த்திபன் ஒரு போட்டோவை பகிர்ந்துள்ளார். அதில் மைக் உடன் ரோபோ சங்கருக்கு முத்தம் கொடுத்துள்ளார் பார்த்திபன். அதன் உடன், ‛‛மைக்கை கண்டுபிடித்தவர் எமிலி பெர்லினர். மைக்கை கேட்ச் பிடிக்காமல் விட்டர் ரோபோ சங்கர். மைக்கால் பிடிபட்டவர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன். முடிவில் முத்தமிட்டவர்'' என பதிவிட்டு இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.