தமிழ் சினிமாவில் கடன் இல்லாத ஒரே தயாரிப்பாளர் நான்தான்: ஞானவேல்ராஜா | பிளாஷ்பேக்: ஒரு வெற்றிப் படத்துடன் ஒதுங்கிய இயக்குனர் | பிளாஷ்பேக்: முதல் காரை பரிசாக வாங்கிய பாகவதர் | நான் நடிக்க ஆசைப்பட்டேன், சூரி நடிக்கப் போகிறார் : சசிகுமார் | டாக்சிக்கால் கடும் சர்ச்சை : இன்ஸ்டாகிராம் விட்டு விலகிய 'டாக்சிக்' நடிகை | அனுமதி பெற்றே சிரஞ்சீவி படத்தில் இளையராஜா பாடல் | 2026 : ஓடிடியில் நேரடியாக வெளியான முதல் படம் 'அனந்தா' | பொங்கல் போட்டியில் விலகிய 'திரௌபதி 2, ஜாக்கி' | ஜனநாயகன் தாமதம் ஆனாலும், சரியான நேரத்தில் வெளியாகும் : நடிகர் கார்த்தி | ஜனநாயகன் சென்சார் பிரச்னை.... : எல்லாம் நன்மைக்கே என்கிறார் விமல் |

பார்த்திபன் இயக்கி, நடித்துள்ள படம் 'இரவின் நிழல்'. உலகின் புது முயற்சியாக இந்த படம் ஒரே ஷாட்டில் லான் லீனியர் படமாக எடுக்கப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன் இப்பட விழாவில் நடிகர் ரோபோ சங்கர் மீது பார்த்திபன் மைக்கை வீசி எறிந்த சம்பம் சர்ச்சையானது. இதற்கு பார்த்திபன் வருத்தம் தெரிவித்தார். ரோபோ சங்கரும் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. தன் தரப்பு விளக்கத்தையும் கொடுத்தார். இந்நிலையில் இந்த விவகாரத்தை முத்தம் கொடுத்து முற்றுப்புள்ளி வைத்துள்ளார் பார்த்திபன்.
இதுபற்றி பார்த்திபன் ஒரு போட்டோவை பகிர்ந்துள்ளார். அதில் மைக் உடன் ரோபோ சங்கருக்கு முத்தம் கொடுத்துள்ளார் பார்த்திபன். அதன் உடன், ‛‛மைக்கை கண்டுபிடித்தவர் எமிலி பெர்லினர். மைக்கை கேட்ச் பிடிக்காமல் விட்டர் ரோபோ சங்கர். மைக்கால் பிடிபட்டவர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன். முடிவில் முத்தமிட்டவர்'' என பதிவிட்டு இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.