கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து | தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி | நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து | தி கேர்ள் பிரண்ட் படத்தை கட்டாயம் பாருங்கள் : ஜான்வி கபூர் | சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் வெளியானது | டிசம்பர் 12ல் ஓடிடிக்கு வரும் காந்தா | தர்மேந்திராவின் 90வது பிறந்தநாள் : ஹேமமாலினி உருக்கம் | பவுன்சர்கள் செயல் : மன்னிப்பு கேட்ட சூரி | 10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம் | டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி |

70 வயதானாலும் மம்முட்டி தற்போதும் இளம் ஹீரோவை போல கதாநாயகனாகவே நடித்து வருகிறார். அதேசமயம் கதாநாயகனாக மட்டுமே நடிப்பேன் என அடம் பிடிக்காமல் கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலும் நடித்து வருகிறார் மம்முட்டி. அந்த வகையில் தற்போது அவர் நடித்துள்ள புழு என்கிற திரைப்படத்தில் இதுவரை அவர் ஏற்று நடித்திராத ஒரு வேடத்தில் அதிலும் குறிப்பாக நெகட்டிவ் சாயல் கலந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதில் மம்முட்டி ஒரு குடும்பத் தலைவனாகவும் அவரது மனைவியாக பார்வதியும் டீன் ஏஜ் பையன் ஒருவனுக்கு இருவரும் பெற்றோராகவும் நடித்துள்ளனர்.
இந்த படம் மே 13ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தை பெண் இயக்குனர் ரதீனா என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு கதை எழுதியுள்ள வர்ஷாத், மம்முட்டி நடித்து வந்த உண்ட என்கிற படப்பிடிப்பின்போது இந்த கதையை கூறியுள்ளார்.
படத்தில் தனக்கு நெகட்டிவ் கதாபாத்திரம் என்றதும் இந்த படத்தில் என்னுடைய கதாபாத்திரத்திற்கு கெட்டவன் என்பதற்கான காரணங்களை வலுவாக வைத்திருக்கிறீர்களா என்றும், இதில் எனக்கு நடிப்பை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்புகள் இருக்கிறதா என்றும் கேட்டுள்ளார் மம்முட்டி. நிச்சயமாக உங்களது கதாபாத்திரத்திற்கு வலுவான பின்னணி உள்ளது. அதுமட்டுமல்ல படம் முழுவதும் உங்கள் பார்வையில்தான் கதை நகரும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறியதும் உடனே இந்தப் படத்தில் நடிக்க சம்மதம் சொல்லிவிட்டாராம் மம்முட்டி.