பிளாஷ்பேக்: முத்தான மூன்று சுப்புலக்ஷ்மிகளை வெள்ளித்திரைக்குத் தந்த இயக்குநர் கே சுப்ரமணியம் | மீண்டும் புதிய படங்களில் நடிப்பதற்கு தயாராகும் கியாரா அத்வானி! | விரைவில் கைதி 2 : கார்த்தி கொடுத்த அப்டேட் | ‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா |

சினிமாவில் அறிமுகமாகி கடந்த 20 வருடங்களாய் முன்னணியில் இருப்பவர் நடிகை த்ரிஷா. இன்று தன்னுடைய 40வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். இதையொட்டி திருப்பதியில் தனது அம்மா உடன் சென்று சாமி தரிசனம் செய்தார் த்ரிஷா. தரிசனம் முடிந்து வெளியே வந்த த்ரிஷா உடன் ஏராளமான ரசிகர்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

இதனிடையே த்ரிஷா தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ‛‛20 ஆண்டுகள். உண்மையில் ஆசீர்வதிக்கப்பட்டதாகவும் நன்றியுடனும் உணருகிறேன். இன்னும் நல்ல படைப்புகள், இயக்குனர்கள் படங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன். வெற்றியோ, தோல்வியோ எனக்கு என்றும் உறுதுணையாக இருக்கும் எனது ரசிகர்களுக்கு பெரிய நன்றி. அவர்கள் தரும் ஊக்கமும், ஆதரவும் தான் என்னை இன்னும் நல்ல படங்களில் நடிக்க உந்துதலாக இருக்கிறது'' என்றார்.

தற்போது ‛பொன்னியின் செல்வன்' படத்தில் நடித்து முடித்துள்ளார் த்ரிஷா. அடுத்து அருண் வசீகரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு ‛தி ரோட்' என பெயரிட்டு, பிறந்தநாளில் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர். இந்த படம் மதுரை கதைக்களத்தில் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் பழிவாங்கும் கதையில் உருவாகிறது. மேலும் படத்திற்கு தி ரோட் - ரிவென்ஞ் இன்று 462 கி.மீ என டேக் லைன் கொடுத்துள்ளனர்.