நான் நடந்தால், பேசினால் சாதனைதான்: சிம்பொனி நிகழ்ச்சியில் இளையராஜா | ஸ்ரீதேவியுடன் நடித்தேன், அவர் மகளுடனும் நடித்து விட்டேன் : ரவிகிஷன் பெருமிதம் | ஸ்பை திரில்லரான 'ஆல்பா' படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் ஆலியா பட் | 'பிரேமலு 2' கைவிடப்பட்டது : ஹீரோவே வெளியிட்ட அதிர்ச்சி தகவல் | ஹாய் ஹலோ வேண்டாம் ; கியாரா அத்வானிக்கு 'டாக்ஸிக்' இயக்குனர் போட்ட உத்தரவு | அடுத்தடுத்து போட்டோஷுட், கலக்கல் புகைப்படங்களுடன் காஜல் அகர்வால் | அஜித் தாயார் உடல் தகனம்; முதல்வர் விஜய், திரிஷா இரவில் நேரில் ஆறுதல் | தேன் மழை, சந்திரமுகி, சூரரைப் போற்று - ஞாயிறு திரைப்படங்கள் | அவமானப்படுத்தியதாக பெண் தயாரிப்பாளர் புகார் : தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் இருவர் மீது வழக்கு பதிவு | நடிகர் சத்யேந்திரா உடல் தகனம் |

தானா சேர்ந்த கூட்டம் படத்தை தொடர்ந்து நான்கு வருடங்களுக்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் காத்துவாக்குல ரெண்டு காதல். விஜய்சேதுபதி கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் நயன்தாரா, சமந்தா இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். கத்திமேல் நடக்கும் கதையம்சம் கொண்ட இந்த படத்தை இன்றைய இளம் ரசிகர்கள் ரசிக்கும்படியாக கொடுத்ததில் இயக்குனர் விக்னேஷ் சிவன் வெற்றி பெற்றிருக்கிறார்.
இந்த நிலையில் இந்த படத்தை பார்த்துவிட்டு விக்னேஷ் சிவனை பாராட்டியுள்ளார் நடிகை சிம்ரன். இதுபற்றி அவர் கூறும்போது, “விக்னேஷ் சிவன் மீண்டும் சாதித்திருக்கிறார்.. ஒரு சிக்கலான கதையை சரியான விதத்தில் கொடுத்திருக்கிறார்.. விக்னேஷ் சிவனால் மட்டுமே இது முடியும்.. ஒரு முழுநீள பொழுதுபோக்கு படம் தான் காத்துவாக்குல ரெண்டு காதல்.. விக்னேஷ் சிவனுக்கும் அவரது குழுவிற்கும் வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார் சிம்ரன்.




