சேயோன் : 24 வருடங்களுக்குப் பிறகு இணையும் நண்பர்கள் | தியாகராஜன் குமாரராஜா, விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகும் 'பாக்கெட் நாவல்' | ஆன்மிகப் படங்களை நோக்கி நகரும் தமிழ், தெலுங்கு சினிமா | தெலுங்கில் சர்வானந்த் ஜோடியாக நடிக்கும் ருக்மணி வசந்த் | சயின்ஸ் பிக்சன் படத்திற்காக 10 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்த குஞ்சாக்கோ-மஞ்சு வாரியர் | தனக்கு விருது வாங்கித் தந்த படத்தை 4 வருடமாகியும் பார்க்கத் தயங்கும் ரேவதி | அறிமுகப் படம் வெளியாகும் முன்பே அடுத்த வாய்ப்பு பெற்ற சிவகுமார் முருகேசன் | 134 படங்களின் பாடல்களை இளையராஜா பயன்படுத்த தடை | மோகன்லால் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பிரியதர்ஷன் | சிரஞ்சீவிக்கு முதல் திருமண அழைப்பிதழ் வைத்த அல்லு சிரிஷ் |

தானா சேர்ந்த கூட்டம் படத்தை தொடர்ந்து நான்கு வருடங்களுக்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் காத்துவாக்குல ரெண்டு காதல். விஜய்சேதுபதி கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் நயன்தாரா, சமந்தா இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். கத்திமேல் நடக்கும் கதையம்சம் கொண்ட இந்த படத்தை இன்றைய இளம் ரசிகர்கள் ரசிக்கும்படியாக கொடுத்ததில் இயக்குனர் விக்னேஷ் சிவன் வெற்றி பெற்றிருக்கிறார்.
இந்த நிலையில் இந்த படத்தை பார்த்துவிட்டு விக்னேஷ் சிவனை பாராட்டியுள்ளார் நடிகை சிம்ரன். இதுபற்றி அவர் கூறும்போது, “விக்னேஷ் சிவன் மீண்டும் சாதித்திருக்கிறார்.. ஒரு சிக்கலான கதையை சரியான விதத்தில் கொடுத்திருக்கிறார்.. விக்னேஷ் சிவனால் மட்டுமே இது முடியும்.. ஒரு முழுநீள பொழுதுபோக்கு படம் தான் காத்துவாக்குல ரெண்டு காதல்.. விக்னேஷ் சிவனுக்கும் அவரது குழுவிற்கும் வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார் சிம்ரன்.




