ஒரே காரில்... ஒரே கலரில்...: ஜோடியாக திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய், திரிஷா | சாரா அர்ஜுனின் வளர்ச்சி பெருமையாக உள்ளது! - சொல்கிறார் இயக்குனர் ஏ.எல்.விஜய் | விஜய்யின் ஜனநாயகனுக்கு மார்ச் 17ல் சென்சார் சான்றிதழ்! | லெஜெண்ட் சரவணனின் 'லீடர்' படத்தின் டீசர் வெளியானது! | சிக்ஸ் பேக் விபரீதமான முயற்சி! - நடிகர் பரத் | மார்ச் 27ம் தேதியன்று திரைக்கு வரும் ஹாப்பி ராஜ்! | சொன்ன தேதிக்கு முன்பே திரைக்கு வருகிறது 'உஸ்தாத் பகத்சிங்' | 3 வருடங்களுக்கு பிறகு நாயகியாக நடிக்கும் ரைசா வில்சன் | ஆங்கிலோ இந்திய பெண்ணாக நடிக்கும் ப்ரீத்தி முகுந்தன் | நடிகர் ஆனார் அஜித் அண்ணன் |

ராக்கி படம் மூலம் ரசிகர்களை கவனிக்க வைத்த இயக்குனர் அருண் மாதேஸ்வரன் அடுத்ததாக இயக்கியுள்ள சாணிக்காயிதம் திரைப்படம் வரும் மே 6-ஆம் தேதி ஓடிடியில் வெளியாக இருக்கிறது. முதன் முறையாக இந்தப் படத்தில் இயக்குனர் செல்வராகவன் நடிகராக மாறியுள்ளதுடன் கதையின் நாயகனாகவும் நடித்துள்ளார். கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு சென்சார் போர்டு ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது..
ஆனால் ஏ சான்றிதழ் வழங்கியது பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளாத இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இந்த படத்தில் பல காட்சிகளை சென்சாரில் வெட்ட சொல்லிவிட்டார்கள் என்பதற்காக தான் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளதுடன் சென்சார் இந்த செயலுக்கு தனது கண்டனங்களையும் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “ஏற்கனவே ட்ரெய்லரில் வெளியாகி ரசிகர்களால் பார்க்கப்பட்ட காட்சி படத்தில் இருக்காது என்பதுதான் துரதிர்ஷ்டம்.. அது வெறும் டைரக்டர் கட் ஆகவே போய்விடும்” என்று கூறியுள்ளார்.




