பாலிவுட்டில் தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா பூஜா ஹெக்டே? | 'கருப்பு' வெளிநாட்டு வசூல் : 7 மில்லியன் யுஎஸ் டாலர் | ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நன்றி சொல்லும் ராம் சரண் ரசிகர்கள் | மலையாள படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த லோகேஷ் கனகராஜ் | சமந்தாவின் மா இண்டி பங்காரம் படத்திற்கு போட்டியாக களமிறங்கும் மூன்று படங்கள்! | விஷாலுக்கும் சேர்த்து வேலை பார்ப்பேன் : அமைச்சர் ராஜ்மோகன் | 40 வருடங்களை நிறைவு செய்யும் 'விக்ரம்' | 400 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'ஜெயிலர் - காவாலய்யா' | ரிலீஸூக்கு தயாராகும் சர்வர் சுந்தரம்? | ஹிரித்திக் ரோஷனிடம் வந்து நிற்கும் ஜெயிலர் 2 |

ராக்கி படம் மூலம் ரசிகர்களை கவனிக்க வைத்த இயக்குனர் அருண் மாதேஸ்வரன் அடுத்ததாக இயக்கியுள்ள சாணிக்காயிதம் திரைப்படம் வரும் மே 6-ஆம் தேதி ஓடிடியில் வெளியாக இருக்கிறது. முதன் முறையாக இந்தப் படத்தில் இயக்குனர் செல்வராகவன் நடிகராக மாறியுள்ளதுடன் கதையின் நாயகனாகவும் நடித்துள்ளார். கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு சென்சார் போர்டு ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது..
ஆனால் ஏ சான்றிதழ் வழங்கியது பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளாத இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இந்த படத்தில் பல காட்சிகளை சென்சாரில் வெட்ட சொல்லிவிட்டார்கள் என்பதற்காக தான் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளதுடன் சென்சார் இந்த செயலுக்கு தனது கண்டனங்களையும் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “ஏற்கனவே ட்ரெய்லரில் வெளியாகி ரசிகர்களால் பார்க்கப்பட்ட காட்சி படத்தில் இருக்காது என்பதுதான் துரதிர்ஷ்டம்.. அது வெறும் டைரக்டர் கட் ஆகவே போய்விடும்” என்று கூறியுள்ளார்.




