சமந்தாவின் இன்ஸ்டா முடக்கப்பட்டதா? | வெந்து தணிந்தது காடு - இசை விழா ஆகஸ்ட்டில் நடைபெறுகிறது | பொன்னியின் செல்வன் - நந்தினியாக ஐஸ்வர்யா ராய் | 'தி கிரேமேன்' - பட புரொமோஷனுக்காக ஹாலிவுட் பறந்த தனுஷ் | விஜய்யின் வாரிசு - பிரெஞ்சு படத்தின் தழுவலா? | பார்த்திபனை ஆச்சரியப்படுத்திய லோகேஷ் கனகராஜ் | உலக அளவில் சாதனை படைத்த 'கேஜிஎப்' போஜ்புரி | ஜவான் - ஷாருக்கானுக்கும் வில்லன் விஜய் சேதுபதி? | ஷங்கரின் படத்தில் நடனத்திற்கு 1000 பேர், சண்டைக்கு 1200 பேர் | ‛வாரியர்' விழாவில் கலந்து கொள்ளும் 28 பிரபலங்கள் |
பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி மற்றும் பலர் நடித்து கடந்த மாதம் ஏப்ரல் 14ம் தேதி வெளிவந்த படம் 'கேஜிஎப் 2'. இப்படம் தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வசூலையும் வாரிக் குவித்து வருகிறது. ஐந்து மொழிகளில் வெளியான இப்படம் ரூ.1000 கோடிக்கும் அதிகமான வசூலை இதுவரை பெற்றுள்ளது.
ஹிந்தியில் ரூ.400 கோடி வசூலைப் பெற்றுள்ள இந்தப் படம், கன்னடத்தில் ரூ.160 கோடி, தெலுங்கில் ரூ.130 கோடி வசூலைப் பெற்றுள்ளது. தற்போது தமிழகத்திலும் ரூ.100 கோடி வசூலைக் கடக்க உள்ளது. ஒரு திரைப்படம் வெளியான ஐந்து மொழிகளில் நான்கு மொழிகளில் 100 கோடி வசூலித்திருப்பது பெரிய விஷயம். வெளிநாடுகளிலும் இப்படம் 160 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.
தமிழில் 'பாகுபலி 2' படத்திற்குப் பிறகு ஒரு டப்பிங் படம் ரூ.100 கோடி வசூலிப்பது இதுவே முதல் முறை. அதுவும் ஒரு கன்னடப் படம் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு தமிழிகத்தில் 100 கோடி வசூலிப்பதெல்லாம் சாதாரண விஷயமல்ல. கன்னடப் படத்தை இப்படி ஓட வைக்க வேண்டுமா என திரையுலகத்தைச் சேர்ந்த சிலர் கேள்வி எழுப்பியிருந்தாலும் மக்கள் விரும்பும் படங்கள் ஓடி வசூலைக் குவிக்கும் என்று இங்குள்ளவர்களுக்கு புரிய வைத்திருக்கிறார்கள்.