இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் |
கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களிலும் கதாநாயகியாக நடித்ததன் மூலம் கன்னட உலகைத் தாண்டி தென்னிந்திய அளவில் பிரபலமான முகமாக மாறிவிட்டார் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி. இந்த நிலையில் தொடர்ந்து பல மீடியாக்களுக்கு அவர் பேட்டி அளித்து வருகிறார். ஏற்கனவே ஒரு பேட்டியில் அவர் மலையாள திரையுலகம் பற்றி கூறும்போது, மலையாளத்தில் தான் முதன்முதலாக பார்த்தது துல்கர் சல்மான் நடித்த சார்லி படம்தான் என கூறியிருந்தார்.
தற்போது இன்னொரு பேட்டியில் மலையாள திரையுலகம் பற்றி மீண்டும் அவர் சிலாகித்துக் கூறும்போது, “மோகன்லால் நடித்த லூசிபர் திரைப்படத்தை தியேட்டரில் சென்று பார்த்தேன். அதன்பிறகு அந்தப்படத்திற்கு நான் காதலியாகவே மாறி விட்டேன். அந்த அளவுக்கு என்னை அந்த படம் ஈர்த்து விட்டது. கேஜிஎப் 2 ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக கேரளா வந்தபோது அந்த படத்தின் இயக்குனரான நடிகர் பிரித்விராஜை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.. அப்போது அவரிடம் உடனடியாக இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுங்கள் என நேரிலேயே கோரிக்கை வைத்தேன். அந்த அளவிற்கு அதன் இரண்டாம் பாகத்தை பார்க்கவும் ஆர்வமாக இருக்கிறேன்” என்று கூறியுள்ளார் ஸ்ரீநிதி ஷெட்டி.