ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களிலும் கதாநாயகியாக நடித்ததன் மூலம் கன்னட உலகைத் தாண்டி தென்னிந்திய அளவில் பிரபலமான முகமாக மாறிவிட்டார் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி. இந்த நிலையில் தொடர்ந்து பல மீடியாக்களுக்கு அவர் பேட்டி அளித்து வருகிறார். ஏற்கனவே ஒரு பேட்டியில் அவர் மலையாள திரையுலகம் பற்றி கூறும்போது, மலையாளத்தில் தான் முதன்முதலாக பார்த்தது துல்கர் சல்மான் நடித்த சார்லி படம்தான் என கூறியிருந்தார்.
தற்போது இன்னொரு பேட்டியில் மலையாள திரையுலகம் பற்றி மீண்டும் அவர் சிலாகித்துக் கூறும்போது, “மோகன்லால் நடித்த லூசிபர் திரைப்படத்தை தியேட்டரில் சென்று பார்த்தேன். அதன்பிறகு அந்தப்படத்திற்கு நான் காதலியாகவே மாறி விட்டேன். அந்த அளவுக்கு என்னை அந்த படம் ஈர்த்து விட்டது. கேஜிஎப் 2 ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக கேரளா வந்தபோது அந்த படத்தின் இயக்குனரான நடிகர் பிரித்விராஜை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.. அப்போது அவரிடம் உடனடியாக இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுங்கள் என நேரிலேயே கோரிக்கை வைத்தேன். அந்த அளவிற்கு அதன் இரண்டாம் பாகத்தை பார்க்கவும் ஆர்வமாக இருக்கிறேன்” என்று கூறியுள்ளார் ஸ்ரீநிதி ஷெட்டி.