திரிஷ்யம் 3: பூஜையுடன் ஆரம்பம் | மோகன்லாலுக்கு மம்முட்டி, சிரஞ்சீவி வாழ்த்து | சாலைவாசிகளுக்கு போர்வை வழங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ் | படப்பிடிப்பில் விபத்து: கொதிக்கும் எண்ணெய் கொட்டி சான்வி காயம் | 'தாதா சாகேப் பால்கே' விருது மலையாள சினிமா கலைஞர்களுக்கு சமர்ப்பணம்: மோகன்லால் | 'மதராஸி' வெற்றியைக் கொண்டாடிய படக்குழு | பிளாஷ்பேக்: 300வது படத்தை இசையால் தாலாட்டிய இளையராஜா | பிளாஷ்பேக்: அந்தக்கால வடிவேலு | ராதிகாவின் தாயார் காலமானார் | பிளாஷ்பேக்: மதுரை தங்கம் திரையரங்கில் தூள் கிளப்பிய கே பாக்யராஜின் “தூறல் நின்னு போச்சு” |
பெங்களூரு : மொழி பிரச்னையை வைத்து அரசியல் தான் நடக்கிறது என்று பார்த்தால் இப்போது இதை வைத்து சினிமாவிலும் பிரச்னை கிளம்ப தொடங்கி உள்ளது. ஹிந்தி தொடர்பாக கன்னட நடிகர் கிச்சா சுதீப்பும், ஹிந்தி நடிகர் அஜய் தேவ்கனும் பதிவிட்ட கருத்துக்கள் மோதல் போக்காக மாறி பேசு பொருளாகி உள்ளது.
சமீபகாலமாக எல்லா மொழிகளிலும் பான் இந்தியா படங்கள் உருவாகி வருகின்றன. ஒரு மொழியில் ஒரு படத்தை எடுத்துவிட்டு அதை பிற மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட்டு கல்லா கட்டி வருகின்றனர். தமிழில் நான் ஈ படம் மூலம் ரசிகர்களுக்கு பிரபலமான கன்னட நடிகர் கிச்சா சுதீப் 'விக்ராந்த் ரோணா' என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை கன்னடம் மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் வெளியிடுகிறது.
![]() |
![]() |