பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' |

தெலுங்குத் திரையுலகின் சீனியர் நடிகரான சிரஞ்சீவி தனது மகன் ராம்சரணுடன் இணைந்து நடித்துள்ள 'ஆச்சார்யா' படம் நாளை மறுதினம் ஏப்ரல் 29ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு ஐதராபாத்தில் நடைபெற்றது. அப்போது புதிய படங்களுக்கு டிக்கெட் கட்டணங்களை ஆந்திர, தெலங்கானா அரசுகள் உயர்த்திக் கொள்ள அனுமதி அளித்தது குறித்து பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த சிரஞ்சீவி, “கொரோனா ஊரடங்கு அனைத்து தொழில்களையும் பாதிப்படைய வைத்தது, அதில் சினிமாவும் விதிவிலக்கல்ல. அந்த தாமதத்தால் எங்களது படத்தின் பட்ஜெட் அதிகமானது. நாங்கள் 50 கோடியை வட்டியாக மட்டுமே கொடுத்தோம் என்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியுமா ?. அந்த 50 கோடியில் ஒரு மீடியம் பட்ஜெட் படத்தை எடுத்து முடித்திருக்கலாம்.
ரசிகர்களுக்கு அற்புதமான விஷுவல் அனுபவத்தைக் கொடுப்பதற்காக நாங்கள் கூடுதலாக செலவு செய்கிறோம். அப்படி செலவு செய்யும் போது அரசாங்கத்திடம் எங்களது படங்களுக்கு கூடுதல் கட்டணம் கேட்பதில் தவறில்லை என நினைக்கிறேன். நாங்கள் பிரபலங்கள், 42 சதவீதம் வருமான வரி செலுத்துகிறோம், இது மற்றவர்களைக் காட்டிலும் அதிகம். அதில் ஒரு சிறு பகுதியை இப்படி கேட்பதில் தவறில்லை. கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து இன்னும் நாங்கள் மீள வேண்டும்,” என்று கூறியிருக்கிறார்.