Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரூ.50 கோடி வட்டியாகக் கொடுத்தோம் - சிரஞ்சீவி ஆதங்கம்

27 ஏப், 2022 - 10:30 IST
எழுத்தின் அளவு:
We-pay-Rs.50-crore-as-a-interest-says-Chiranjeevi

தெலுங்குத் திரையுலகின் சீனியர் நடிகரான சிரஞ்சீவி தனது மகன் ராம்சரணுடன் இணைந்து நடித்துள்ள 'ஆச்சார்யா' படம் நாளை மறுதினம் ஏப்ரல் 29ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு ஐதராபாத்தில் நடைபெற்றது. அப்போது புதிய படங்களுக்கு டிக்கெட் கட்டணங்களை ஆந்திர, தெலங்கானா அரசுகள் உயர்த்திக் கொள்ள அனுமதி அளித்தது குறித்து பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த சிரஞ்சீவி, “கொரோனா ஊரடங்கு அனைத்து தொழில்களையும் பாதிப்படைய வைத்தது, அதில் சினிமாவும் விதிவிலக்கல்ல. அந்த தாமதத்தால் எங்களது படத்தின் பட்ஜெட் அதிகமானது. நாங்கள் 50 கோடியை வட்டியாக மட்டுமே கொடுத்தோம் என்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியுமா ?. அந்த 50 கோடியில் ஒரு மீடியம் பட்ஜெட் படத்தை எடுத்து முடித்திருக்கலாம்.

ரசிகர்களுக்கு அற்புதமான விஷுவல் அனுபவத்தைக் கொடுப்பதற்காக நாங்கள் கூடுதலாக செலவு செய்கிறோம். அப்படி செலவு செய்யும் போது அரசாங்கத்திடம் எங்களது படங்களுக்கு கூடுதல் கட்டணம் கேட்பதில் தவறில்லை என நினைக்கிறேன். நாங்கள் பிரபலங்கள், 42 சதவீதம் வருமான வரி செலுத்துகிறோம், இது மற்றவர்களைக் காட்டிலும் அதிகம். அதில் ஒரு சிறு பகுதியை இப்படி கேட்பதில் தவறில்லை. கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து இன்னும் நாங்கள் மீள வேண்டும்,” என்று கூறியிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
லட்சுமிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது: கர்நாடக அரசு வழங்கியதுலட்சுமிக்கு வாழ்நாள் சாதனையாளர் ... 15 வருடங்களை நிறைவு செய்த 'சென்னை 600028' 15 வருடங்களை நிறைவு செய்த 'சென்னை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Easwar Kamal - New York,யூ.எஸ்.ஏ
28 ஏப், 2022 - 17:15 Report Abuse
Easwar Kamal ஆந்திர கார பய புள்ளைகள் வென நமபலம். நம்பி பணத்தை கொட்டுவானுவ. இது காலம் காலமா நடந்துகிட்டு வருது.
Rate this:
N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா
28 ஏப், 2022 - 11:05 Report Abuse
N Annamalai ஏன் அவ்வளவு கஷ்ட்ட பட்டு படம் எடுக்க வேண்டும் .நீங்கள் வட்டி காட்டினால் மக்கள் வட்டி அதை கட்ட வேண்டுமா ?.ஏன் சாதாரண மாக படம் எடுக்க முடியாதா ?.மக்களுக்கு நல்ல கதை பாட்டு நல்ல நடிப்பு இருந்தால் போதும் .
Rate this:
vadivelu - thenkaasi,இந்தியா
28 ஏப், 2022 - 07:53 Report Abuse
vadivelu செலவு செய்வதை வட்டியும் முதலுமாக வசூல் செய்ய வேண்டும் என்று சினிமாக்காரர்கள் நினைப்பதில் தவறில்லை.ஆனா ஏன் இந்த ரசிகர்கள் மூலம் அரசுக்கு செல்லும் வரியை பற்றி நீலி கண்ணீர் நடிக்கிறீர்கள்.
Rate this:
thangam - bangalore,இந்தியா
27 ஏப், 2022 - 14:22 Report Abuse
thangam கண்களின் தண்ணீர் வருகிறது. இவர்களின் கஷ்டத்தை பார்த்து.. பாவம். சோறு இல்லை போல. அட ச்சே....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in