பிளாஷ்பேக்: விக்ரம் முதல் காட்சி வசூலை குழந்தைகளுக்கு கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த பாடல் சர்ச்சை | ஹீரோவான யு டியூபர் | 4 வருடங்களுக்கு பிறகு வெளியானது 'பேமிலி மேன் 3' | 8 மணி நேர வேலை: ஓங்கி ஒலிக்கும் நடிகைகளின் குரல் | சர்வதேச திரைப்பட விழாவில் 'அமரன்' டீம் | டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் |

பாலிவுட் கவர்ச்சி நடிகையான ராக்கி சாவந்த் சர்ச்சை நாயகி. அடிக்கடி எதையாவது செய்தோ, பேசியோ பரபரப்பு கிளப்புவார். கடைசியாக தனது காதல் கணவர் தன்னை அடித்து துன்புறுத்துவதாக கூறினார். அதன்பிறகு சில காலம் அமைதியாக இருந்தவர். இப்போது மீண்டும் அடுத்த சர்ச்சையை தொடங்கி விட்டார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், பழங்குடியின பெண்களை போல ஆடை அணிந்து அவர்களை கிண்டல் செய்வது போல பேசியுள்ளார். இதற்கு எதிர்ப்பு கிளம்பியது.
இந்த நிலையில் ஜார்க்கண்ட் மாநில கேந்த்ரிய சர்னா சமிதி என்ற அமைப்பின் தலைவர் ட்ரிக்கி பழங்குடியின மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியதாக ராக்கி சாவந்த் மீது ராஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் ராக்கி சாவந்த் மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து ட்ரிக்கி கூறியிருப்பதாவது: நடிகை ராக்கி சாவந்த், அரை நிர்வாண ஆடை அணிந்தபடி, பழங்குடியினப் பெண்களை இழிவுப்படுத்தியுள்ளார். ஆபாசமான கருத்துகளையும் தெரிவித்துள்ளார். இதற்கு அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும், இல்லை என்றால் அவருக்கு எதிரான போராட்டம் தொடரும். என்கிறார்.