மீண்டும் விளையாட்டு படத்தை கையில் எடுக்கும் அருண் ராஜா காமராஜ் | ஹிந்தி நடிகர் சதீஷ் ஷா காலமானார் | தனுஷ் தம்பியாக நடிக்க வேண்டியது : விஷ்ணு விஷால் | பிரபாஸ் படத்தில் இணைந்த இளம் நடிகை | ரஜினிகாந்த் எடுத்த புது முடிவு? | எனக்கு ஆர்வம் இல்லை : லியோ படப்பிடிப்பில் மகன் நடிகரிடம் திரிஷா சொன்ன வார்த்தை | பவர்புல்லான சவுண்ட் ஸ்டோரி : விவேக் ஓபராய் | கார் மோதி 3 பேர் விபத்தில் சிக்கிய விவகாரம் : விளக்கம் கூறி சர்ச்சையில் சிக்கிய நடிகை | அரசு மருத்துவமனை பின்னணியில் உருவாகும் 'பல்ஸ்' | ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய லட்சுமி மேனன் மனுதாக்கல் |

பிரசாந்த் நீல் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் 14ம் தேதி வெளியான 'கேஜிஎப் 2' படம் ரூ.1100 கோடி வரை வசூலித்து சாதனை படைத்துள்ளது. இந்த படத்தில் நடிகர் யஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அதீரா எனும் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டியிருந்தார். இந்நிலையில் இந்த படத்தில் நடித்தது குறித்து சஞ்சய் தத், மனம் திறந்து நெகிழ்ச்சியான பதிவினை தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ளார்.
இது குறித்து வெளியிட்டுள்ள பதிவில், எப்போதும் சில படங்கள் மற்றவைகளை விட சிறப்பாக இருக்கும். அந்த வகையில் எனக்கு கிடைத்த படம்தான் 'கேஜிஎஃப் 2'. இந்தப் படம் என்னுடைய நடிப்புத் திறமையை எனக்கே மீண்டும் நினைவூட்டியது. இதை நான் இதயத்திலிருந்து உணர்ந்துள்ளேன். இந்தப் படம் முடியும்போது சினிமா என்றால் என்ன என்று எனக்கு புரிய வைத்தது.
இயக்குனர் பிரசாந்த் நீல், எனக்கும் ஆதிராவை காட்டினார். என்னுடைய கதாபாத்திரம் மிரட்டலாக வந்ததற்கு இயக்குனர் பிரசாந்த் நீல் தான் காரணம். ஒரு கேப்டன் போன்று எங்களையெல்லாம் வழிநடத்தினார். குடும்பத்தினரும் ரசிகர்களும் தான் என்னுடைய பலம் என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.