மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! |

தன்னை ஏமாற்றி நில மோசடி செய்ததாக காமெடி நடிகர் சூரி, நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை மீது அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் கைதாவார் என்று தெரிகிறது.
நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையும், முன்னாள் டிஜிபியுமான ரமேஷ் குடவாலா மற்றும் தயாரிப்பாளர் அன்புவேல்ராஜன் ஆகியோர் இடம் வாங்கித் தருவதாக கூறி 2 கோடியே 90 லட்சம் வாங்கினார்கள். ஆனால் இடம் வாங்கித் தராமல் ஏமாற்றினார்கள். இதுகுறித்து புகார் அளித்த பிறகு ஒரு கோடியே 30 லட்சத்தை திருப்பிக் கொடுத்து விட்டு மீதமுள்ள பணத்தை தராமல் மோசடி செய்து விட்டனர் என்று சூரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதைத்தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் மீனா தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நடிகர் சூரி துணை கமிஷனர் மீனா முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தார். இந்த விசாரணையில், நடிகர் சூரியிடம் முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலா மற்றும் சினிமா தயாரிப்பாளர் அன்புவேல் ராஜ் பணம் பெற்றது ஆவணங்கள் மூலம் உறுதியாகி உள்ளது. இதைதொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலா மற்றும் சினிமா தயாரிப்பாளர் அன்புவேல் ராஜ் மீது மோசடி வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த வழக்கில் ரமேஷ் குடவாலாவும், அன்புவேல்ராஜனும் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. அதற்கு முன்பு ரமேஷ் குடாவாவையும், அன்புவேல்ராஜனையும் நேரில் அழைத்து விசாரிக்கவும் குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர்.




