‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

இசையமைப்பாளர் இளையராஜா சமீபத்தில் அம்பேத்ரும், மோடியும் என்ற புத்தகத்திற்கு எழுதிய அணிந்துரையில் அம்பேத்கரின் சிந்தனைகளை மோடி நடைமுறைபடுத்தி வருகிறார் என்று குறிப்பிட்டிருந்தார். இதனை ஒரு குறிப்பிட்ட பிரிவினர் கடுமையாக விமர்சித்து வந்தனர். இதற்கு தனது தம்பி மூலம் பதிலளித்த இளையராஜா நான் மெட்டு போட்டுவிட்டால் அதை மாற்றி திரும்ப போட மாட்டேன். அதேபோல எனது கருத்தில் இருந்தும் பின்வாங்க மாட்டேன் என்ற அறிவித்தார்.
இந்த நிலையில் இளையராஜா, சமூகவலைதளத்தில் மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஷோபனா நடித்திருந்த 'தளபதி' படத்தில் வரும் 'சுந்தரி கண்ணால் ஒரு சேதி' என்ற பாடலில் இடம் பெற்றிருந்த 'நான் உனை நீங்க மாட்டேன். நீங்கினால் தூங்க மாட்டேன். பாடுவேன் உனக்காகவே. இந்த நாள் நன்னாள் என்று பாடு' என்ற வரிகளை இளையராஜா பாடியிருந்தார்.
சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு 'நான் உனை நீங்க மாட்டேன்' என்று அவர் மோடியை மறைமுகமாக குறிப்பிட்டு பாடி இருப்பதாக சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.




