'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
தொலைக்காட்சி பிரபலங்களில் மிகவும் தைரியமான பெண்ணாக வீஜே பார்வதி அறியப்படுகிறார். யூ-டியூப்களில் அடல்ட் கண்டண்ட் பேசியே டிரெண்டிங்க் ஆனவர் என்பதால், சோஷியல் மீடியாவில் இவர் வெளியிடும் பதிவுகளுக்கு அடிக்கடி மிகவும் ஆபாசமான கமெண்டுகளே வரும். ஆனால், அதையெல்லாம் மிகவும் தைரியமாகவும் கூலாகவும் கையாண்டு வருகிறார். ஜீ தமிழில் சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் தொலைக்காட்சி நடிகையாகவும் அறிமுகமான பார்வதிக்கு தற்போது மெல்ல மெல்ல சினிமா வாய்ப்புகள் தேடி வருகிறது. இந்நிலையில், அவர் மேஹாலயா, சிரபுஞ்சி என ஜாலியாக ஊர் சுற்றி வருகிறார்.
அங்கு தனது குழுவுடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ள அவர், “நான் எப்போதுமே ஒரு பயணி. பயணம் வாழ்வின் மிகச்சிறந்த தருணங்களை உருவாக்குவதற்கான ஒரு வழி. பயணம் செய்யுங்கள். காசு போனால் மீண்டும் கிடைக்கும், நேரம் திரும்ப கிடைக்காது. நான் எனது இருபதுகளை அதிகமாக பயணம் செய்வதிலும், புதிய மனிதர்களை சந்திப்பதிலும் செலவிட ஆசைப்படுகிறேன்' என கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களுக்கு தற்போது லைக்ஸ் குவிந்து வருகிறது.