காமெடி முதல் கிரைம் த்ரில்லர் வரை : இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | வாரணாசி-க்கு பின்னணி இசை அமைப்பது எப்போது... : கீரவாணி கொடுத்த அப்டேட் | 'சர்வம் மாயா' நாயகிக்கு பாராட்டுடன் பரிசும் அனுப்பிய சூர்யா ஜோதிகா | நன்றி சொன்னார் எஸ்.பி.முத்துராமன் : கண்கலங்கினார் வி.சி.குகநாதன் | ஹனிரோஸுக்கு ஜிஎஸ்டி துறை அனுப்பிய நோட்டீசை தள்ளுபடி செய்த கேரள உயர்நீதிமன்றம் | நடிகர் ஜெயசூர்யாவின் 39 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை | கேரளா பிளஸ் 2 மாதிரி தேர்வில் மோகன்லாலின் சினிமா பயணம் குறித்து கேள்வி | அஞ்சு ரூபாய் டாக்டர் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் மம்முட்டி | 'வேள்பாரி' வேலைகளில் தீவிரம் காட்டும் ஷங்கர் | பெரும் வரவேற்பைப் பெற்ற 'நாகபந்தம்' டீசர் |

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. ஹிந்தியிலும் நடிக்க தொடங்கி உள்ளார். தற்போது அவரது நடிப்பில் காத்துவாக்குல ரெண்டு காதல், சாகுந்தலம் படங்கள் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. இதுதவிர யசோதா படத்தில் நடித்து வருகிறார். தனது படங்களுக்கு கோடிக்கணக்கில் சம்பளம் பெறுகிறார்.
இந்நிலையில் சமூகவலைளத்தில் ரசிகர்கள் உடன் கலந்துரையாடினார். அப்போது ஒருவர் உங்களின் முதல் சம்பளம் எவ்வளவு என கேட்டார். அதற்கு, ‛‛நான் பத்தாம் வகுப்போ, 11ம் வகுப்போ படித்தபோது நிகழ்ச்சி ஒன்றில் வரவேற்பு பெண்ணாக பலமணிநேரம் பணிபுரிந்தேன். அதற்காக ரூ.500 சம்பளம் பெற்றேன். அதுதான் எனது முதல் சம்பளம்'' என தெரிவித்துள்ளார்.




