சூர்யாவின் கங்குவா குறித்து ஜோதிகா வெளியிட்ட தகவல் | மே 10ல் அஜித் இல்லாமல் தொடங்கும் குட் பேட் அக்லி படப்பிடிப்பு | முதலாவது 4ம் பாகத் திரைப்படம் - அசத்துமா அரண்மனை 4? | விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை |
"மழை படத்தின் மூலம் பருவ மழையாய் கோலிவுட்டில் நுழைந்தவர், ஸ்ரேயா. என்ன தவம் செய்தாரோ, சில படங்களில் நடித்து வந்தவர், திடுத்திடுப்பென்று, "சிவாஜி படத்தில் ரஜினிக்கு ஜோடியாகி, உச்ச நடிகை அந்தஸ்தை எட்டிப்பிடித்தார். ஆனபோதும் தொடர்ந்து, அந்த இடத்தை அவரால் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை. சில படங்கள், அவரை சறுக்கிவிட, தமிழில் இருந்து வெளியேறி, இந்தி, கன்னடம் என்று நடித்து வருகிறார். ஆனால், "நான் அங்கேயே தேங்கிவிடமாட்டேன் என்று சொல்லும் ஸ்ரேயா, "அடுத்த ரவுண்டுக்கான அஸ்திவாரத்தை அழுத்தமாக பதித்து வருகிறேன் என்கிறார். தீபா மேத்தாவின், "மிட் நைட் சில்ரன்ஸ், ரங்தே பசந்தி இந்தி படம் மற்றும் "சந்திரா ஆகிய படங்களுக்கு பின், மீண்டும் தமிழில், முழு வீச்சில் நடிப்பேன் என்கிறார்.