நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
மலையாள நடிகர் நிவின் பாலியை வைத்து ஒரு படத்தை ராம் இயக்கி வருகிறார். அஞ்சலி, சூரி முக்கிய வேடத்தில் நடிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். தனுஷ்கோடி, கேரளாவின் வண்டிப்பெரியார், வாகமன், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நடந்த படப்பிடிப்பு இப்போது முழுவதுமாக நிறைவடைந்துள்ளது. இதை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர். மற்ற பணிகள் விரைவில் துவங்குகின்றன. தமிழ், மலையாளத்தில் படம் வெளியாக உள்ளது.
இதுபற்றி சூரி கூறுகையில், ‛‛இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. ஒரு மனிதனின் வாழ்க்கையில் தன்னுடைய ரயில் பயணங்கள் மறக்க முடியாத நிகழ்களாக இருக்கும். அதுபோல் இந்த படத்திற்கான எங்களுடைய ரயில் பயணம் இனிதே நிறைவடைந்தது. பிரியா விடை பெறுகிறேன்'' என்றார்.