ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
மலையாள நடிகர் நிவின் பாலியை வைத்து ஒரு படத்தை ராம் இயக்கி வருகிறார். அஞ்சலி, சூரி முக்கிய வேடத்தில் நடிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். தனுஷ்கோடி, கேரளாவின் வண்டிப்பெரியார், வாகமன், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நடந்த படப்பிடிப்பு இப்போது முழுவதுமாக நிறைவடைந்துள்ளது. இதை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர். மற்ற பணிகள் விரைவில் துவங்குகின்றன. தமிழ், மலையாளத்தில் படம் வெளியாக உள்ளது.
இதுபற்றி சூரி கூறுகையில், ‛‛இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. ஒரு மனிதனின் வாழ்க்கையில் தன்னுடைய ரயில் பயணங்கள் மறக்க முடியாத நிகழ்களாக இருக்கும். அதுபோல் இந்த படத்திற்கான எங்களுடைய ரயில் பயணம் இனிதே நிறைவடைந்தது. பிரியா விடை பெறுகிறேன்'' என்றார்.