பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
தமிழ் சினிமாவில் ‛வேலைன்னு வந்துட்ட வெள்ளைக்காரன்' படத்தில் ‛புஷ்பா' என்ற கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானவர் ரேஷ்மா பசுபலேட்டி. இவர் தென்னிந்திய மொழிகளில் சில படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் தொலைக்காட்சி நடிகையாகவும் சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டுள்ளார். ஆனால், இவர் தமிழில் முன்னணி நடிகரான பாபி சிம்ஹாவின் அக்கா என்பது பலருக்கு தெரியாது. பாபி சிம்ஹாவின் திருமணத்தில் கூட ரேஷ்மா கலந்து கொள்ளவில்லை. இதனால் ரேஷ்மாவிற்கு பாபி சிம்ஹாவிற்கும் பேச்சுவார்த்தை கிடையாது என்று கூட செய்திகள் பரவியது.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் நெறியாளர் ஒருவர் உங்களை பாபியுடன் சேர்த்து பார்க்கவே முடியவில்லையே? என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ரேஷ்மா, 'நாங்கள் வீட்டில் சந்தித்துக் கொள்வோம். நிறைய போட்டோக்கள் இணையத்தில் இருக்கிறது. நாங்கள் ஒரே குடும்பம். அதை ஏன் விளம்பரப்படுத்த வேண்டும்' என அதில் கூறியுள்ளார்.