ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் | ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு | விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? | சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர் | மரபணு மாற்றப்பட்ட மனிதனின் கதை : ‛கைமேரா' அர்த்தம் இதுதான் | சூர்யாவுடன் நடிப்பது வாழ்நாள் கனவு: மீனாட்சி தினேஷ் | 'இந்தியன் 2, தக் லைப்' தோல்விகள் : 'இந்தியன் 3' எதிர்காலம் என்ன ? | பிளாஷ்பேக்: ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ராஜேஷ் | பிளாஷ்பேக்: 40 வயது மூத்தவருக்கு ஜோடி: இதிலும் சாதனை படைத்த ஸ்ரீதேவி | 25 ஆண்டுகளுக்கு பிறகு மகனுடன் இணைந்து நடிக்கும் ஜெயராம் |
தமிழ் சினிமாவில் ‛வேலைன்னு வந்துட்ட வெள்ளைக்காரன்' படத்தில் ‛புஷ்பா' என்ற கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானவர் ரேஷ்மா பசுபலேட்டி. இவர் தென்னிந்திய மொழிகளில் சில படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் தொலைக்காட்சி நடிகையாகவும் சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டுள்ளார். ஆனால், இவர் தமிழில் முன்னணி நடிகரான பாபி சிம்ஹாவின் அக்கா என்பது பலருக்கு தெரியாது. பாபி சிம்ஹாவின் திருமணத்தில் கூட ரேஷ்மா கலந்து கொள்ளவில்லை. இதனால் ரேஷ்மாவிற்கு பாபி சிம்ஹாவிற்கும் பேச்சுவார்த்தை கிடையாது என்று கூட செய்திகள் பரவியது.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் நெறியாளர் ஒருவர் உங்களை பாபியுடன் சேர்த்து பார்க்கவே முடியவில்லையே? என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ரேஷ்மா, 'நாங்கள் வீட்டில் சந்தித்துக் கொள்வோம். நிறைய போட்டோக்கள் இணையத்தில் இருக்கிறது. நாங்கள் ஒரே குடும்பம். அதை ஏன் விளம்பரப்படுத்த வேண்டும்' என அதில் கூறியுள்ளார்.