ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
தமிழ் சினிமாவில் ‛வேலைன்னு வந்துட்ட வெள்ளைக்காரன்' படத்தில் ‛புஷ்பா' என்ற கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானவர் ரேஷ்மா பசுபலேட்டி. இவர் தென்னிந்திய மொழிகளில் சில படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் தொலைக்காட்சி நடிகையாகவும் சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டுள்ளார். ஆனால், இவர் தமிழில் முன்னணி நடிகரான பாபி சிம்ஹாவின் அக்கா என்பது பலருக்கு தெரியாது. பாபி சிம்ஹாவின் திருமணத்தில் கூட ரேஷ்மா கலந்து கொள்ளவில்லை. இதனால் ரேஷ்மாவிற்கு பாபி சிம்ஹாவிற்கும் பேச்சுவார்த்தை கிடையாது என்று கூட செய்திகள் பரவியது.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் நெறியாளர் ஒருவர் உங்களை பாபியுடன் சேர்த்து பார்க்கவே முடியவில்லையே? என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ரேஷ்மா, 'நாங்கள் வீட்டில் சந்தித்துக் கொள்வோம். நிறைய போட்டோக்கள் இணையத்தில் இருக்கிறது. நாங்கள் ஒரே குடும்பம். அதை ஏன் விளம்பரப்படுத்த வேண்டும்' என அதில் கூறியுள்ளார்.