22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை | அஜித்தை சந்தித்த நடிகர் சதீஷ் |
விஜய் ஆண்டனி நடித்து வரும் படங்களில் ஒன்று கொலை. விடியும் முன் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த பாலாஜி குமார் இயக்கி உள்ளார். விஜய் ஆண்டனியுடன் ரித்திகா சிங் , ஜான் விஜய், ராதிகா சரத்குமார், முரளி சர்மா, மீனாட்சி சவுத்ரி, சித்தார்த்தா சங்கர், அர்ஜுன் சிதம்பரம், கிஷோர் குமார், சம்கித் போரா உள்பட பலர் நடித்துள்ளனர். சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்துள்ளார், கிரிஷ் கோபாலகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்த படம் 1923ல் நடந்த ஒரு மாடல் அழகியின் கொலையை கருவாக கொண்ட உண்மை கதையை தழுவிய படமாகும். இதுபற்றி இயக்குனர் பாலாஜி குமார் கூறியதாவது: 1923ல் நடந்த டோரதி கிங்கின் கொலை சம்பவத்தை இன்ஸ்பிரேஷனாக எடுத்துக் கொண்டு இந்த படம் உருவாகி உள்ளது. அந்த கொலை சம்பவம் உலகம் முழுவதையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அந்த கொலையின் பின்னால் உள்ள மர்மத்தை அறிய உலகம் துடித்தது. அதுதான் இந்த படம்.
இந்த கொலை சம்பவத்தை நவீன கால பின்னணிக்கு ஏற்றவாறு மாற்ற வேண்டியது இருந்தது. லீலா என்ற மாடல் அழகி கொல்லப்படுகிறார். அவரது ஆண் நண்பர்களில் 5 பேருக்கு அவர் இறந்தால் பலன் இருக்கிறது. அதில் கொலையாளி யார் என்பதை துப்பறியும் நிபுணர் விஜய் ஆண்டனி கண்டுபிடிப்பதே படத்தின் திரைக்கதை. என்கிறார் இயக்குனர் பாலாஜி குமார்.