நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
விஜய் ஆண்டனி நடித்து வரும் படங்களில் ஒன்று கொலை. விடியும் முன் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த பாலாஜி குமார் இயக்கி உள்ளார். விஜய் ஆண்டனியுடன் ரித்திகா சிங் , ஜான் விஜய், ராதிகா சரத்குமார், முரளி சர்மா, மீனாட்சி சவுத்ரி, சித்தார்த்தா சங்கர், அர்ஜுன் சிதம்பரம், கிஷோர் குமார், சம்கித் போரா உள்பட பலர் நடித்துள்ளனர். சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்துள்ளார், கிரிஷ் கோபாலகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்த படம் 1923ல் நடந்த ஒரு மாடல் அழகியின் கொலையை கருவாக கொண்ட உண்மை கதையை தழுவிய படமாகும். இதுபற்றி இயக்குனர் பாலாஜி குமார் கூறியதாவது: 1923ல் நடந்த டோரதி கிங்கின் கொலை சம்பவத்தை இன்ஸ்பிரேஷனாக எடுத்துக் கொண்டு இந்த படம் உருவாகி உள்ளது. அந்த கொலை சம்பவம் உலகம் முழுவதையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அந்த கொலையின் பின்னால் உள்ள மர்மத்தை அறிய உலகம் துடித்தது. அதுதான் இந்த படம்.
இந்த கொலை சம்பவத்தை நவீன கால பின்னணிக்கு ஏற்றவாறு மாற்ற வேண்டியது இருந்தது. லீலா என்ற மாடல் அழகி கொல்லப்படுகிறார். அவரது ஆண் நண்பர்களில் 5 பேருக்கு அவர் இறந்தால் பலன் இருக்கிறது. அதில் கொலையாளி யார் என்பதை துப்பறியும் நிபுணர் விஜய் ஆண்டனி கண்டுபிடிப்பதே படத்தின் திரைக்கதை. என்கிறார் இயக்குனர் பாலாஜி குமார்.