மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் | நீ பிரச்னைக்குரியவன் அல்ல : வில்லன் நடிகருக்கு மம்முட்டி சொன்ன அட்வைஸ் | யோகி பாபு, ரவி மோகன் படம் ஆகஸ்ட்டில் துவக்கம் | விஜய் சேதுபதி, பூரி ஜெகந்நாத் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சாலைக்கு எம்.எஸ்.வி. பெயர் : முதல்வருக்கு நன்றி கூறி மகன் உருக்கம் | என் 5 படங்களின் கதைகளையும் முதலில் இந்த ஹீரோவிடம் தான் கூறினேன் : வெங்கி அட்லூரி | ‛பிளாக்மெயில்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் தந்தைக்கு புல் மீல்ஸ்... எனக்கு ஒரு ஸ்பூன் சாதம் : சல்மான்கான் சொன்ன டயட் ரகசியம் |
சென்னை : நடிகர் விஜய் நடித்துள்ள 'பீஸ்ட்' படத்திற்கு குவைத் அரசு தடை விதித்துள்ள நிலையில் தமிழகத்திலும் தடை விதிக்க வேண்டும் என, தமிழ்நாடு முஸ்லிம் லீக் கோரிக்கை விடுத்துள்ளது.
விஜய் நடிப்பில் உருவாகி உள்ள, 'பீஸ்ட்' திரைப்படம் வரும் 13ம் தேதி வெளியாக உள்ளது. முஸ்லிம்களை பயங்கரவாதி களாக சித்தரித்துள்ளதாகக் கூறி, இப்படத்திற்கு குவைத் நாட்டின் அரசு தடை விதித்துள்ளது. தமிழகத்திலும் பீஸ்ட் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என, தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் முஸ்தபா, தமிழக உள்துறை செயலர் பிரபாகருக்கு கடிதம் எழுதி உள்ளார்.
கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது: தங்கள் ஜாதி அடையாளம் மற்றும் ஜாதி தலைவர்களின் பெயர்கள் திரைப்படத்தில் இடம் பெற்றால், அதற்கு சமுதாய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. முஸ்லிம்கள் மட்டும் வெடிகுண்டு, துப்பாக்கி கலாசாரத்தில் ஈடுபட்டு, நாட்டின் அமைதிக்கு எதிராக செயல்படுவது போல, தொடர்ந்து திரைப்படங்களில் காட்சிகள் இடம் பெறுவது மிகவும் வேதனை அளிக்கக்கூடிய விஷயம்.
கடந்த 2015 வெள்ளத்தின்போதும், கொரோனா பேரிடரின்போதும், முஸ்லிம் அமைப்புகள் செய்த பணிகளை, யாரும் மறந்து விட முடியாது. தற்போது முஸ்லிம்கள், ரம்ஜான் நோன்பு கடைபிடித்து வருகின்றனர். இந்த சூழலில், முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக சித்தரித்துள்ள, 'பீஸ்ட்' திரைப்படம் வெளிவந்தால், முஸ்லிம்கள் இடையே அசாதாரண சூழல் ஏற்படும். எனவே, இப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு முஸ்தபா தெரிவித்துள்ளார்.
சமூக ஆர்வலர் புகார்
சென்னை, செம்பியத்தைச் சேர்ந்தவர் தேவராஜன்; சமூக ஆர்வலர். இவர், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று அளித்த புகார்: நடிகர் விஜய் நடித்துள்ள, பீஸ்ட் படம், வரும் 13ம் தேதி வெளியாக உள்ளது. தியேட்டர் உரிமையாளர்கள் இப்படத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளனர். அத்துடன், சட்ட விரோதமாக ஆறு காட்சிகள் திரையிடவும் ஏற்பாடுகள் நடக்கின்றன. அதேபோல, 'பார்க்கிங்' கட்டணத்தையும் பல மடங்கு உயர்த்தி வசூலிக்க உள்ளனர். இதை சட்ட ரீதியாக தடுக்க வேண்டும். கூடுதல் கட்டணம் வசூலிப்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.