ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருப்பவர் சென்னையைச் சேர்ந்த சமந்தா. தமிழை விட தெலுங்கில் பல வெற்றிப் படங்களில் நடித்தார். தெலுங்கு நடிகரான நாகசைதன்யாவைக் காதலித்து கரம் பிடித்து பின்னர் பிரிந்தார்.
இதுநாள் வரையிலும் சமந்தாவுக்கும், நாகசைதன்யாவுக்கும் தெலுங்கில் ஒரே மேனேஜரே அவர்களது திரைப்படம் சம்பந்தப்பட்ட பணிகளைக் கவனித்து வந்தார். பிரிவுக்குப் பின் அந்த மேனேஜர் நாகசைதன்யாவுக்கு ஆதரவாகச் சென்றதால் தற்போது அந்த மேனேஜரை சமந்தா மாற்றிவிட்டாராம்.
ஹிந்தியிலும் பட வாய்ப்புகளைப் பெறுவதற்காக பாலிவுட்டைச் சேர்ந்த ஒருவரை புதிய மேனேஜராக நியமித்துள்ளாராம். அவரிடமே தெலுங்குப் படங்களுக்கான பணிகளையும் ஒப்படைத்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.
சமந்தா தற்போது தமிழில் 'காத்து வாக்குல ரெண்டு காதல்', தெலுங்கில் 'சாகுந்தலம்' ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.




