ஜுலை 4ல் 6 படங்கள் ரிலீஸ் | 2025ன் 6 மாதங்களில் 122 படங்கள் ரிலீஸ் | விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை கொலை செய்யும் யூடியூபர்கள்: சுசீந்திரன் காட்டம் | இரண்டேகால் படம் : விமல் சொன்ன புதுக்கணக்கு | அனிமல் படம் குறித்த விமர்சனத்திற்கு ராஷ்மிகா கொடுத்த பதிலடி | கே.பி.ஒய் பாலாவின் ‛காந்தி கண்ணாடி' டைட்டில் முன்னோட்ட வீடியோ வெளியீடு | அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை : நடிகர் சங்கம் எச்சரிக்கை | தேரே இஸ்க் மெயின் படப்பிடிப்பு நிறைவு | இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் |
இசை அமைத்த படங்களின் இசையை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து, இசையமைப்பாளர் இளையராஜா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், இசை நிறுவனங்கள் பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியன் ரிகார்டு உற்பத்தி நிறுவனம் தாக்கல் செய்த மனு: இசையமைப்பாளர் இளையராஜா இசை அமைத்து வெளியான 20 தமிழ் படங்கள் மற்றும் இதர மொழிகளில் வெளியான சில படங்களுக்கு, தயாரிப்பாளர்களிடம் இருந்து பதிப்புரிமை பெற்றுஉள்ளோம். அதனால், இந்த படங்களின் இசையை பயன்படுத்த, இளையராஜாவுக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டது.
மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், 22 படங்களுக்கான இசையை பயன்படுத்த, இளையராஜா மற்றும் இரண்டு மியூசிக் நிறுவனங்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, இளையராஜா தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இம்மனு, நீதிபதிகள் துரைசாமி, தமிழ்ச்செல்வி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இளையராஜா சார்பில், மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன், வழக்கறிஞர்கள் கே.தியாகராஜன், ஏ.சரவணன் ஆஜராகினர். மனுவுக்கு, இரண்டு வாரங்களில் பதில் அளிக்கும்படி, இந்தியன் ரிக்கார்டு உற்பத்தி நிறுவனம் உள்ளிட்ட மூன்று இசை நிறுவனங்களுக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.