ஜப்பானில் தனுஷ், மாரி செல்வராஜ் படத்தின் படப்பிடிப்பு | சர்தார் 2 படப்பிடிப்பு நிறைவு பெற்றது | கமல்ஹாசன் தயாரிப்பில் அருண் குமார்? | தொகுப்பாளினி.... டூ நடிகை.... : நவீனாஸ்ரீயின் நம்பிக்கை | அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு |
தென்னிந்திய சினிமாவின் முக்கியமான பழம்பெரும் நடிகை லட்சுமி. தென்னிந்திய மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் கடைசியாக அவர் 2015ம் ஆண்டு வெளியான மூணே மூணு வார்த்தை என்ற படத்தில் நடித்தார். மதுமிதா இயக்கிய இந்த படத்தில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஜோடியாக நடித்தார்.
அதன்பிறகு தெலுங்கில் சமந்தாவுடன் ஓ பேபி படத்தில் நடித்தவர் இப்போது கன்னடப் படத்தில் நடிக்கிறார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: கொரோனா காலத்துக்கு முன்பே தொடங்கப்பட்ட படம். இப்போது நிலைமை சரியானதும் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. இயக்குநர் கதையை சொன்ன விதம் எனக்கு பிடித்திருந்தது, கதையும் பிடித்திருந்தது அதனால் நடிக்க ஒப்புக் கொண்டேன். ஒரே பிரச்சினையை வெவ்வேறு நபர்கள் எப்படி கையாளுகிறார்கள் என்பதுதான் படத்தின் ஒன் லைன். நல்ல கதைகள் அமைந்தால் தொடர்ந்து நடிப்பேன். இன்னும் உயிரோடு இருப்பதுதான் என்னை நடிக்க வைக்கிறது, நான் விரும்பும் விஷயங்களைச் செய்ய வேண்டும் என்று நினைப்பேன். இளைய தலைமுறையிடமிருந்தும் நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன். என்றார்.