இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
பேரன்பு படத்திற்கு பிறகு ராம் இயக்கி வரும் படத்தில் நிவின் பாலி, அஞ்சலி, சூரி நடித்து வருகின்றனர். மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் கமாட்சி தயாரிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். கடந்த ஆண்டே இதன் படப்பிடிப்பு தொடங்கி விட்டது. தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது.
தனுஷ்கோடியில் தொடங்கிய இதன் படப்பிடிப்பு தற்போது சென்னையில் ரயில் ஷெட் அமைத்து படமாக்கப்பட்டு வருகிறது. இதில் நிவின்பாலி, சூரி நடித்து வருகிறார்கள். விரைவில் அனைத்து படப்பிடிப்புகளும் முடிந்து, படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகள் தொடங்க இருக்கிறது. ராமேஸ்வரம், தனுஷ்கோடி இடையிலான ரயில் பயணத்தை கதைக்களமாக கொண்டு இந்த படம் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.