டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

பேரன்பு படத்திற்கு பிறகு ராம் இயக்கி வரும் படத்தில் நிவின் பாலி, அஞ்சலி, சூரி நடித்து வருகின்றனர். மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் கமாட்சி தயாரிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். கடந்த ஆண்டே இதன் படப்பிடிப்பு தொடங்கி விட்டது. தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது.
தனுஷ்கோடியில் தொடங்கிய இதன் படப்பிடிப்பு தற்போது சென்னையில் ரயில் ஷெட் அமைத்து படமாக்கப்பட்டு வருகிறது. இதில் நிவின்பாலி, சூரி நடித்து வருகிறார்கள். விரைவில் அனைத்து படப்பிடிப்புகளும் முடிந்து, படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகள் தொடங்க இருக்கிறது. ராமேஸ்வரம், தனுஷ்கோடி இடையிலான ரயில் பயணத்தை கதைக்களமாக கொண்டு இந்த படம் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.




