இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
ராஜமவுலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம்சரண் மற்றும் பலர் நடித்த 'ஆர்ஆர்ஆர்' படம் நேற்று உலகம் முழுவதும் ஐந்து மொழிகளில் வெளியானது. படம் பற்றி பெரும்பாலும் பாசிட்டிவ்வான விமர்சனங்கள் வெளிவந்துள்ளதால் இப்படமும் 'பாகுபலி 2' போலவே வசூலில் சாதனை படைக்கும் என பேச்சு பரவி வருகிறது.
நேற்றைய முதல் நாள் வசூலாக சுமார் 150 கோடியை எளிதில் கடந்திருக்கும் என முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆந்திரா, தெலுங்கு மாநிலங்களில் ஷேர் தொகையாக மட்டும் 74 கோடி கிடைத்துள்ளதாம். கர்நாடகாவில் 16 கோடி, தமிழகத்தில் 10 கோடி, கேரளாவில் 3 கோடி, அமெரிக்காவில் 'பெய்டு பிரிவியூ' காட்சிகளில் மட்டும் 26 கோடியும், இங்கிலாந்தில் 2 கோடியும், ஹிந்தியில் 20 கோடி வரையிலும் வந்திருக்கலாம் என்கிறார்கள். இந்தத் தொகையே 148 கோடி வரை வருகிறது. இன்னும் விடுபட்ட வெளிநாடுகளின் விவரங்களையும் கணக்கிட்டால் 150 கோடிக்கும் மேல் வசூலாகியிருப்பதாகச் சொல்கிறார்கள்.
இன்றும் நாளையும் விடுமுறை தினம் என்பதால் இரண்டு நாளுக்கும் சேர்த்து கூட 150 கோடி வரலாம். முதல் வார முடிவில் 500 கோடியைத் தொடவும் வாய்ப்புள்ளது என பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் வருகின்றன. 'பாகுபலி 2' வசூலை 'ஆர்ஆர்ஆர்' கடக்குமா, கடக்காதா என்பதுதான் ஒரு கேள்வியாக உள்ளது.