வீட்டை வைத்து கடன் வாங்கி படம் தயாரித்ததுஏன்? ஆண்ட்ரியா | 'வாழு, வாழ விடுங்கள்': கிண்டல், கேலிகளுக்கு கீர்த்தி சுரேஷ் பதில் | அஜித் அடுத்த பட அறிவிப்பு - தொடரும் தாமதம் | மீண்டும் தெலுங்கு இயக்குனர் படத்தில் சூர்யா ? | 'மாஸ்க்': வாய்ப்பில்லாத ஆண்ட்ரியாவுக்கு வாய்ப்புகள் வருமா? | 50 வருட திரையுலக பயணத்தில் இருந்து ஓய்வு பெறும் நடிகை துளசி | 'மெமரிஸ்' இரண்டாம் பாகம் ; பிரித்விராஜ் விருப்பம் | பட விளம்பர மோசடி ; பெண் உள்ளிட்ட ஐவர் மீது நடிகர் யஷ்ஷின் தாயார் போலீசில் புகார் | இரண்டு நாளில் ஒரு மில்லியன் பார்வைகளைத் தொட்ட மஞ்சு வாரியரின் குறும்படம் | மோகன்லால் மம்முட்டி படங்களை பயன்படுத்தியதால் 2 வருட தடை விதித்தனர் ; இயக்குனர் வினயன் |

சிவகார்த்திகேயன் நடிக்கும் 20வது படம் தமிழ், தெலுங்கில் தயாராகிறது. இதனை தெலுங்கில் முன்னணி தயாரிப்பு நிறுவனமான சுரேஷ் புரொடக்ஷன் தயாரிக்கிறது. சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ஜதிரத்னலு இயக்குனர் அனுதீப் இயக்குகிறார். இந்த படத்தில் பிரேம்ஜி அமரன், சத்யராஜ், நவீன் பொலிஷெட்டி ஆகியோரும் நடிப்பதாக கூறப்படுகிறது.
சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நடிகை மரியா ரியாபோஷாப்கா நடிக்க இருக்கிறார் என்று ஏற்கெனவே தகவல்கள் வெளியானது. தற்போது அதனை தயாரிப்பு தரப்பு உறுதிப்படுத்தியுள்ளது.
மரியா போலந்து - உக்ரேனிய திரைப்படமான ஈடர் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ஸ்பை சாகா ஸ்பெஷல் ஓபிஎஸ் 1.5 என்ற வெப் தொடரிலும் நடித்துள்ளார். படத்தில் வரும் வெளிநாட்டு ஹீரோயின் கேரக்டரில் மரியா நடிப்பதாகவும், இதுதவிர மேலும் ஒரு முக்கியமான ஹீரோயின் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.