பராசக்தி முதல் பாடலான 'அடி அலையே' வெளியீடு | தயாரிப்பாளர்களுக்கு கூட பாடல் உரிமையை வழங்கியது இல்லை: இளையராஜா | 'ஜனநாயகன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு : நவ., 8ல் முதல் பாடல் | சத்ய சாய் பாபாவின் மகிமையை சொல்லும் ‛அனந்தா' : நவ., 23ல் வெளியீடு | கிஸ் முதல் நெட்வொர்க் வரை... இந்த வாரா ஓடிடி ரிலீஸ்...! | ''பீரியட் படம் பண்ணுவது தனி அனுபவம்... டைம் மிஷின் மூலம் அந்த காலம் செல்வது மாதிரி'': துல்கர் சல்மான் | ரோஜா 'கம்பேக்': 'லெனின் பாண்டியன்' படத்தில் நடிக்கிறார் | மணிரத்னம் படம் : சிம்புவிற்கு பதில் விஜய் சேதுபதி | ரஜினிகாந்த்தை 'தலைவர்' எனக் குறிப்பிட்ட கமல்ஹாசன் | ஹரிஷ் கல்யாண் அடுத்து நடிக்கும் இரண்டு படங்கள் |

கடந்த சில தினங்களுக்கு முன்பு மலையாளத்தில் குஞ்சாக்கோ போபன், ஜோஜு ஜார்ஜ், விநாயகன் இவர்களுடன் முக்கிய வேடத்தில் பிரகாஷ்ராஜும் நடித்திருந்த 'பட' என்கிற படம் வெளியானது. கே.எம்.கமல் என்பவர் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். கேரளாவில் ஆதிவாசிகள் மற்றும் தலித் நடத்திய போராட்ட களத்தில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை தழுவி இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது. விமர்சன ரீதியாக பாராட்டுக்களையும் இந்த படம் பெற்றுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தை பாலிவுட் நடிகர் அனுராக் காஷ்யப் பார்த்துவிட்டு படக்குழுவினரை பாராட்டியுள்ளார்
இதுபற்றி அவர் கூறும்போது, 'இந்த படம் தற்போது வெளியாகி உள்ளது. இதை தியேட்டரில் தான் பார்க்கவேண்டும். உண்மை சம்பவங்களின் பின்னணியில் பவர்ஃபுல்லான அதேசமயம் பொழுதுபோக்கு அம்சத்துடன் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. இதை மலையாள சினிமாவின் திருப்பங்கள் கொண்ட ,'டாக் டே ஆப்டர்நூன்' படம் என்று சொன்னால் சரியாக இருக்கும் என்று பாராட்டியுள்ளார். அவர் குறிப்பிட்டுள்ள இந்த டாக் டே ஆப்டர்நூன் படம் ஹாலிவுட் இயக்குனர் சிட்னி லூமெட் என்பவர் இயக்கி ரசிகர்களின் ஃபேவரிட் லிஸ்டில் இடம் பிடித்த படம் என்பது குறிப்பிடத்தக்கது.