எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
பத்திரிகையாளராக இருந்து இயக்குனர் ஆனவர் சந்திரா தங்கராஜ். அமீர், வெற்றிமாறனிடம் உதவியாளராக பணியாற்றிய இவர் இயக்கிய கள்ளன் என்ற படம் நேற்று வெளியானது. இந்த படம் குறிப்பிட்ட ஜாதியை திருடர்களாக சித்தரிப்பதாக கூறி தென் மாவட்டங்களில் பல இடங்களில் படத்தை திரையிட விடாமல் தடுத்தனர்.
இதுகுறித்து சந்திரா தங்கராஜ் நிருபர்களிடம் கூறியதாவது: கள்ளன் என்ற தமிழ் சொல் திருடர்களை தான் குறிக்கிறது. ஏற்கனவே திருடன், கள்வர் போன்ற பெயர்களில் படங்கள் உள்ளதால் கள்ளன் என்ற சொல்லை டைட்டிலாக வைத்தேன். அதை புரிந்து கொள்ளாமல் ஜாதி அமைப்பைச் சேர்ந்த ஒரு தலைவர் என்னுடைய தொலைபேசி எண்ணை பொதுவெளியில் அனுப்பியிருக்கிறார்.
அவர்கள் பின்னிரவு நேரங்களில் போன் போட்டு ஆபாசமாகப் பேசுகிறார்கள். இரண்டு நாட்களுக்கு முன்பு ஒருத்தர் ஆபாச படங்களை அனுப்பி இது போல் எனக்கும் பண்ண முடியுமா என்று கேட்கிறார்.கடந்த ஒரு மாதமாகவே இது போல் ஆபாச தாக்குதல் நடத்துகிறார்கள். இதுதான் பெண்களுக்கு இவர்கள் கொடுக்கிற மரியாததை.
நல்லாட்சி நடந்து கொண்டிருக்கும் இந்த நாட்டில் ஜாதி அமைப்புகளின் ஆதிக்கம் தலை தூக்க விடாமல் முதலமைச்சர் அவர்கள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கண்ணீர் மல்க கூறினார் சந்திரா தங்கராஜ். பேட்டியின் போது தயாரிப்பாளர் மதியழகன் உடன் இருந்தார்.