‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் | வித்யா பாலனுக்கு நன்றி சொன்ன மலையாள காமெடி நடிகர் | திருமணத்தின் போதே கர்ப்பமாக இருந்தேன் ; பாலிவுட் நடிகை நேஹா துபியா ஓபன் டாக் | காலில் செருப்பு அணியாமல் என்னை பக்குவப்படுத்திக் கொள்கிறேன் : விஜய் ஆண்டனி | பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த பாக்., நடிகை; 9 மாதங்களுக்கு பிறகே கண்டுபிடித்த போலீசார் | மேலாளரை உன்னி முகுந்தன் தாக்கவில்லை ; நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த போலீசார் | ரஜினி ஒரு புத்திசாலி, கத்தியைப் போல கூர்மையானவர் : ஸ்ருதிஹாசன் | அல்லு அர்ஜுன், அட்லி படத்தில் வில்லனாகும் ஹாலிவுட் நடிகர் |
பிக்பாஸ் அல்டிமேட் நிகச்சியில் போட்டியாளராக நுழைந்த வனிதா அதன்பின் பிக்பாஸ் வீட்டிலிருந்து தாமாகவே வெளியேறினார். அதுமுதலே பிக்பாஸ் முன்போல் இல்லை. எல்லாமே தவறாக நடக்கிறது என விமர்சித்திருந்தார். அதனால் தான் கமல் கூட வெளியேறிவிட்டார் எனவும் குண்டைத் தூக்கி போட்டார். தொடர்ந்து பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை குறித்து சர்ச்சையான கருத்துகளை பதிவிட்டு வந்த அவர், இப்போதும் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது தனது பொழுதுபோக்கு தன்மையை இழந்துவிட்டது. வன்முறை, சண்டைகள், தவறான வார்த்தைகள் என மன உளைச்சலை தரும் வகையில் உள்ளது. இது உங்களை கொல்லக்கூடும்.' என கூறியுள்ளார்.
பிக்பாஸ் நிகச்சியின் மூலம் பிரபலமான வனிதா, தற்போது அந்த பிக்பாஸ் நிகழ்ச்சியையே விமர்சித்து வருவது சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகியுள்ளது.