காமெடி முதல் கிரைம் த்ரில்லர் வரை : இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | வாரணாசி-க்கு பின்னணி இசை அமைப்பது எப்போது... : கீரவாணி கொடுத்த அப்டேட் | 'சர்வம் மாயா' நாயகிக்கு பாராட்டுடன் பரிசும் அனுப்பிய சூர்யா ஜோதிகா | நன்றி சொன்னார் எஸ்.பி.முத்துராமன் : கண்கலங்கினார் வி.சி.குகநாதன் | ஹனிரோஸுக்கு ஜிஎஸ்டி துறை அனுப்பிய நோட்டீசை தள்ளுபடி செய்த கேரள உயர்நீதிமன்றம் | நடிகர் ஜெயசூர்யாவின் 39 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை | கேரளா பிளஸ் 2 மாதிரி தேர்வில் மோகன்லாலின் சினிமா பயணம் குறித்து கேள்வி | அஞ்சு ரூபாய் டாக்டர் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் மம்முட்டி | 'வேள்பாரி' வேலைகளில் தீவிரம் காட்டும் ஷங்கர் | பெரும் வரவேற்பைப் பெற்ற 'நாகபந்தம்' டீசர் |

பிக்பாஸ் அல்டிமேட் நிகச்சியில் போட்டியாளராக நுழைந்த வனிதா அதன்பின் பிக்பாஸ் வீட்டிலிருந்து தாமாகவே வெளியேறினார். அதுமுதலே பிக்பாஸ் முன்போல் இல்லை. எல்லாமே தவறாக நடக்கிறது என விமர்சித்திருந்தார். அதனால் தான் கமல் கூட வெளியேறிவிட்டார் எனவும் குண்டைத் தூக்கி போட்டார். தொடர்ந்து பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை குறித்து சர்ச்சையான கருத்துகளை பதிவிட்டு வந்த அவர், இப்போதும் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது தனது பொழுதுபோக்கு தன்மையை இழந்துவிட்டது. வன்முறை, சண்டைகள், தவறான வார்த்தைகள் என மன உளைச்சலை தரும் வகையில் உள்ளது. இது உங்களை கொல்லக்கூடும்.' என கூறியுள்ளார்.
பிக்பாஸ் நிகச்சியின் மூலம் பிரபலமான வனிதா, தற்போது அந்த பிக்பாஸ் நிகழ்ச்சியையே விமர்சித்து வருவது சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகியுள்ளது.




