மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கடந்த 2019ம் ஆண்டு தேர்தல் நடந்தது. இதில் கே.பாக்யராஜ் தலைமையில் ஒரு அணியினரும், விஷால் தலைமையில் ஒரு அணியினரும் போட்டியிட்டனர். இந்த தேர்தலை எதிர்த்து துணை நடிகர்களான ஏழுமலை, பெஞ்சமின் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, தேர்தலை ரத்து செய்தார். மேலும், மீண்டும் தேர்தல் நடத்தப்படும் வரையில் அரசு நியமித்த தனி அதிகாரியே சங்க நிர்வாகத்தை தொடர்ந்து கவனிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து நடிகர்கள் விஷால், நாசர், கார்த்தி ஆகியோர் தொடர்ந்த மேல்முறையீடு செய்தனர். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற அமர்வு, 'தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் செல்லும். தேர்தலில் பதிவான ஓட்டுகளை 4 வாரத்திற்குள் எண்ணி முடிக்க வேண்டும்,' என கடந்த மாதம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து துணை நடிகர் ஏழுமலை உச்சநீதி மன்றத்தின் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நேற்று நீதிபதிகள் எஸ்.கே.கவுல் மற்றும் எம்.எம்.சுந்தரேஷ் முன் விசாரணைக்கு வந்தது.-அப்போது நீதிபதி எம்.என்.சுந்தரேஷ் இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தபோது அதிலிருந்து நான் விலகி விட்டேன். இப்போதும் விலகிக் கொள்கிறேன் இதற்கு தனிப்பட்ட காரணம் எதுவும் இல்லை. என்று கூறினார். இதனால் இந்த வழக்கு வேறு அமர்வுக்கு மாற்றப்படும் என்று தெரிகிறது.