'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடி தானா? | கென் கருணாஸூக்காக காய்ச்சல் உடன் வந்த தனுஷ்! | மார்ச் 16ல் 'நூறு சாமி' படத்தின் பர்ஸ்ட் லுக் | இரண்டு பாகங்களாக பிரியும் இதயம் முரளி! | மே மாதத்தில் திட்டமிடும் 'கருப்பு' படக்குழு! | மென்மையானவர் விஜய்... நல்ல குடும்பஸ்தர் அஜித்: மனம் திறந்த தமன்னா | 'திரு.மாணிக்கம்' திரைக்கதை புத்தகமாக வெளியீடு | தெலுங்கானா டிக்கெட் கட்டண உயர்வு : தடையை நீக்கிய உச்சநீதிமன்றம் | 3 படங்கள் 1000 கோடி முதலீடு, மீண்டு வருமா தயாரிப்பு நிறுவனம் ? | முதல்வர் ஸ்டாலினின் வாழ்க்கை படமாகிறது: சமுத்திரக்கனி இயக்குகிறார்? |

தென்னிந்தியத் திரையுலகத்தில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்து நம்பர் 1 நடிகையாக இருக்கும் நயன்தாரா இருக்கிறார். ஒரு படத்திற்கு அவரது சம்பளம் 5 கோடி என்கிறது கோலிவுட் வட்டாரம். சில வருடங்களுக்கு முன்பே 3 கோடி சம்பளத்தைத் தொட்ட நயன்தாரா கடந்த சில படங்களாக 5 கோடி வரை வாங்கி வருகிறார்.
அவருக்கு அடுத்த இடத்தில் சில நடிகைகள் இருந்தாலும் அவர்களது அதிகபட்ச சம்பளம் ஒரு படத்திற்கு 2 கோடி வரைதான் இருந்தது. இப்போது நயன்தாராவுக்கு அடுத்து அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக சென்னையிலிருந்து ஐதராபாத்திற்குச் சென்று தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் சமந்தா பிடித்துள்ளார்.
தற்போது 'சாகுந்தலம் (தெலுங்கு), காத்து வாக்குல ரெண்டு காதல்' ஆகிய படங்களில் நடித்து முடித்திருக்கிறார் சமந்தா. அடுத்ததாக முதன்மைக் கதாநாயகியாக அவர் நடிக்க இருக்கும் 'யசோதா' படத்திற்கு சம்பளம் 3 கோடியாம்.
'புஷ்பா' படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி ஒன்றரை கோடி சம்பளம் வாங்கினார் சமந்தா. அதைக் கேட்டவுடன் தயாரிப்பு நிறுவனம் கொடுத்துவிட்டதால்தான் புதிய படத்திற்கு இவ்வளவு சம்பளம் என்கிறார்கள்.




