உயர் நீதிமன்றத்திலும் நடந்ததை சொல்வேன் : நடிகை வழக்கு குறித்து நடிகர் லால் திட்டவட்டம் | பிளாஷ்பேக்: வில்லனையும், நாயகியையும் முன்னிறுத்திய எம்ஜிஆர் | பிளாஷ்பேக்: முத்தான மூன்று சுப்புலக்ஷ்மிகளை வெள்ளித்திரைக்குத் தந்த இயக்குநர் கே சுப்ரமணியம் | மீண்டும் புதிய படங்களில் நடிப்பதற்கு தயாராகும் கியாரா அத்வானி! | விரைவில் கைதி 2 : கார்த்தி கொடுத்த அப்டேட் | ‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் |

சந்தானம் நடிப்பில் கடந்த 2016ல் வெளியாகி ஹிட்டான திரைப்படம் 'தில்லுக்கு துட்டு'. இப்படத்தை 'லொள்ளு சபா' ராம்பாலா இயக்கியிருந்தார். மூன்று வருடங்களுக்கு பிறகு மீண்டும் சந்தானம் மற்றும் ராம்பாலா கூட்டணியில் 'தில்லுக்கு துட்டு' படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இப்படத்தின் மூன்றாவது பாகம் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மூன்றாம் பாகத்தை ராம்பாலாவிற்கு பதிலாக ராம்பாலாவின் இணை இயக்குனர் ஆனந்த இந்த படத்தை இயக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதேசமயம் நாயகனாக சந்தானமே தொடர உள்ளாராம். இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது .