துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது | தனுஷ் 54வது படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. தயாரிப்பாளர் தகவல்! | விஷாலுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள்! |
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானை பொது நிகழ்ச்சிகளில் பார்ப்பதே அரிது. அப்படிப்பட்டவர் சினிமாவில் அதிலும் ஒரு முழு பாடலை பாடி நடித்திருக்கிறார் என்றால் அது ஆச்சரியம் தான்.. ஆனால் அவர் அப்படி ஒப்புக்கொண்டது நடிகர் மோகன்லாலின் நட்புக்காக.. ஆம்.. தற்போது மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகியுள்ள ஆராட்டு என்கிற படத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், அவராகவே தோன்றி தான் இசையமைத்த காதலன் படத்தில் ஹிட்டான முக்காலா முக்காபுலா என்கிற முழு பாடலையும் பாடி அசத்தியுள்ளார்.
கதைப்படி மோகன்லால் தனது கிராமத்து மக்களுக்கு உதவி செய்வதற்காகவும் தனது நண்பரான ஏ.ஆர்.ரகுமான் அழைத்தால் வருவார் என்று நிரூபிப்பதற்காகவும் ஒரு மேடை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வார். அதில்தான் ஏ.ஆர்.ரகுமான் கலந்து கொண்டு பாடுவது போல காட்சி இடம்பெற்றுள்ளது. தூள் படத்தில் சிங்கம் போல என்கிற பாடலை பரவை முனியம்மா பாட, அதில் விக்ரம் எதிரிகளுடன் மோதும் சண்டைக்காட்சியை படமாக்கி இருப்பார்கள். அதேபோல இந்த படத்தில் ஏ.ஆர்.ரகுமான் மேடைக் கச்சேரியில் முக்காலா பாடலை பாடிக்கொண்டிருக்க, மோகன்லால் மேடையின் பின்பக்கம் எதிரிகளை அடித்து துவைத்துக் கொண்டிருப்பதாக இந்த காட்சியை படமாக்கியுள்ளனர். தமிழில் கூட முகம் காட்டாத ஏ.ஆர்.ரகுமான் மலையாள படத்தில் நடித்திருப்பது மலையாள ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.