சூர்யாவின் கங்குவா குறித்து ஜோதிகா வெளியிட்ட தகவல் | மே 10ல் அஜித் இல்லாமல் தொடங்கும் குட் பேட் அக்லி படப்பிடிப்பு | முதலாவது 4ம் பாகத் திரைப்படம் - அசத்துமா அரண்மனை 4? | விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை |
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானை பொது நிகழ்ச்சிகளில் பார்ப்பதே அரிது. அப்படிப்பட்டவர் சினிமாவில் அதிலும் ஒரு முழு பாடலை பாடி நடித்திருக்கிறார் என்றால் அது ஆச்சரியம் தான்.. ஆனால் அவர் அப்படி ஒப்புக்கொண்டது நடிகர் மோகன்லாலின் நட்புக்காக.. ஆம்.. தற்போது மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகியுள்ள ஆராட்டு என்கிற படத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், அவராகவே தோன்றி தான் இசையமைத்த காதலன் படத்தில் ஹிட்டான முக்காலா முக்காபுலா என்கிற முழு பாடலையும் பாடி அசத்தியுள்ளார்.
கதைப்படி மோகன்லால் தனது கிராமத்து மக்களுக்கு உதவி செய்வதற்காகவும் தனது நண்பரான ஏ.ஆர்.ரகுமான் அழைத்தால் வருவார் என்று நிரூபிப்பதற்காகவும் ஒரு மேடை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வார். அதில்தான் ஏ.ஆர்.ரகுமான் கலந்து கொண்டு பாடுவது போல காட்சி இடம்பெற்றுள்ளது. தூள் படத்தில் சிங்கம் போல என்கிற பாடலை பரவை முனியம்மா பாட, அதில் விக்ரம் எதிரிகளுடன் மோதும் சண்டைக்காட்சியை படமாக்கி இருப்பார்கள். அதேபோல இந்த படத்தில் ஏ.ஆர்.ரகுமான் மேடைக் கச்சேரியில் முக்காலா பாடலை பாடிக்கொண்டிருக்க, மோகன்லால் மேடையின் பின்பக்கம் எதிரிகளை அடித்து துவைத்துக் கொண்டிருப்பதாக இந்த காட்சியை படமாக்கியுள்ளனர். தமிழில் கூட முகம் காட்டாத ஏ.ஆர்.ரகுமான் மலையாள படத்தில் நடித்திருப்பது மலையாள ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.