ரஜினியின் 'ஜெயிலர்-2' படத்தில் இணைந்த ஹிந்தி நடிகை அபேக்ஷா போர்வல்! | 15 கிலோ எடை குறைத்த கிரேஸ் ஆண்டனி! | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் அமரன்! | சூர்யாவின் 'கருப்பு' படத்தின் கிளைமாக்ஸை மாற்றும் ஆர்.ஜே.பாலாஜி! | விக்னேஷ் சிவனை தொடர்ந்து ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் எலக்ட்ரிக் கார் வாங்கிய அட்லி! | 'பைசன் முதல் தி ஜூராசிக் வேர்ல்ட்' வரை..... இந்த வார ஓடிடி ரிலீஸ்..! | 'தி பேமிலி மேன் 3' ரிலீஸ்: பதட்டமாகவும், சந்தோஷமாகவும் இருக்கு: மனோஜ் பாஜ்பாய் | என் பெயரில் வரும் அழைப்புகள், மெசேஜ்கள் போலியானவை: தனுஷ் மானேஜர் அறிக்கை | பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் | 'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு |

'கிரீன் இந்தியா சேலஞ்ச்' நிகழ்வு மூலம் தெலுங்குத் திரையுலகத்தின் சினிமா நடிகர்கள், நடிகைகள், பிரபலங்கள் மரக்கன்றுகளை நடுவதை கடந்த சில வருடங்களாகச் செய்து வருகின்றனர். தெலங்கானா மாநில ராஜ்ய சபா எம்.பி.யான சந்தோஷ்குமார் இதை முன்னின்று செய்து வருகிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் 1000 ஏக்கர் நிலத்தைத் தத்தெடுக்க உறுதி அளித்திருந்தார் நாகார்ஜுனா. அதன்படி வனத்துறைக்குச் சொந்தமான செங்கிசெல்லா காட்டுப் பகுதியில் 1000 ஏக்கர் நிலத்தைத் தத்தெடுத்துள்ளார். அங்கு அவரது அப்பா மறைந்த நடிகர் நாகேஸ்வர ராவ் பெயரில் நகர்ப்புற பூங்கா ஒன்றை உருவாக்க உள்ளார். நேற்று தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் பிறந்தநாளை முன்னிட்டு தத்தெடுக்கும் நிகழ்வு நடைபெற்றது.
தனது மனைவி அமலா, மகன்கள் நாக சைதன்யா, அகில் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் இந்நிகழ்வில் கலந்து கொண்டார் நாகார்ஜுனா. அந்த பூங்காவில் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நட உள்ளனர்.




