இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
'கிரீன் இந்தியா சேலஞ்ச்' நிகழ்வு மூலம் தெலுங்குத் திரையுலகத்தின் சினிமா நடிகர்கள், நடிகைகள், பிரபலங்கள் மரக்கன்றுகளை நடுவதை கடந்த சில வருடங்களாகச் செய்து வருகின்றனர். தெலங்கானா மாநில ராஜ்ய சபா எம்.பி.யான சந்தோஷ்குமார் இதை முன்னின்று செய்து வருகிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் 1000 ஏக்கர் நிலத்தைத் தத்தெடுக்க உறுதி அளித்திருந்தார் நாகார்ஜுனா. அதன்படி வனத்துறைக்குச் சொந்தமான செங்கிசெல்லா காட்டுப் பகுதியில் 1000 ஏக்கர் நிலத்தைத் தத்தெடுத்துள்ளார். அங்கு அவரது அப்பா மறைந்த நடிகர் நாகேஸ்வர ராவ் பெயரில் நகர்ப்புற பூங்கா ஒன்றை உருவாக்க உள்ளார். நேற்று தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் பிறந்தநாளை முன்னிட்டு தத்தெடுக்கும் நிகழ்வு நடைபெற்றது.
தனது மனைவி அமலா, மகன்கள் நாக சைதன்யா, அகில் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் இந்நிகழ்வில் கலந்து கொண்டார் நாகார்ஜுனா. அந்த பூங்காவில் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நட உள்ளனர்.