திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
'கிரீன் இந்தியா சேலஞ்ச்' நிகழ்வு மூலம் தெலுங்குத் திரையுலகத்தின் சினிமா நடிகர்கள், நடிகைகள், பிரபலங்கள் மரக்கன்றுகளை நடுவதை கடந்த சில வருடங்களாகச் செய்து வருகின்றனர். தெலங்கானா மாநில ராஜ்ய சபா எம்.பி.யான சந்தோஷ்குமார் இதை முன்னின்று செய்து வருகிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் 1000 ஏக்கர் நிலத்தைத் தத்தெடுக்க உறுதி அளித்திருந்தார் நாகார்ஜுனா. அதன்படி வனத்துறைக்குச் சொந்தமான செங்கிசெல்லா காட்டுப் பகுதியில் 1000 ஏக்கர் நிலத்தைத் தத்தெடுத்துள்ளார். அங்கு அவரது அப்பா மறைந்த நடிகர் நாகேஸ்வர ராவ் பெயரில் நகர்ப்புற பூங்கா ஒன்றை உருவாக்க உள்ளார். நேற்று தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் பிறந்தநாளை முன்னிட்டு தத்தெடுக்கும் நிகழ்வு நடைபெற்றது.
தனது மனைவி அமலா, மகன்கள் நாக சைதன்யா, அகில் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் இந்நிகழ்வில் கலந்து கொண்டார் நாகார்ஜுனா. அந்த பூங்காவில் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நட உள்ளனர்.